புதுக்கோட்டை சுதர்ஷன் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 78ஆவது சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை சுதர்ஷன் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் வி.முருகேசன் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

பள்ளியின் துணை தாளாளர் ஜி.செல்லம் முருகேசன், தலைமைச் செயல் அலுவலர் ஏ.வேல்சாமி, துணை முதல்வர் ஏ.ஐ.விஜயகுமார் கலந்து கொண்டு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். காந்தியடிகள் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள், மாறுவேடப் போட்டிகள், நடனம், கராத்தே மற்றும் சிலம்பம், தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் சிறப்பாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும், விளையாட்டு ஆசிரியர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.