உளுந்தூர்பேட்டை அருகே அரசு பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குரும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மறு கட்டமைப்பு மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் ஆதியம்மாள் முன்னிலையில், திருநாவலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராமலிங்கம் மேற்பார்வையில் மாணவர்களின் பெற்றோர்களால் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலாண்மை குழு தலைவராக பாக்யா ஸ்ரீ, துணைத் தலைவராயாக மோனிஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளியின் உதவி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.