உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள மணிகூண்டு திடலில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதி சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழியின் நினைவாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் உளுந்தூர்பேட்டை வட்டத்தின் சார்பில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மவிகாசப்ரியா அம்பா மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சௌந்தர்யா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர், தொடர்ந்து ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர், ரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர், இந்நிகழ்ச்சியில் மூன்று தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் முன்வந்து உடல் உறுப்பு தானங்கள் செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.