அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆர்.எம்.ஓ.வுக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பாராட்டு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி புதிய ஆர்.எம்.ஓ.வுக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றிய, டாக்டர் ஜி.கொளஞ்சிநாதன் பதவி உயர்வு பெற்று, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ.வாக (ரீஜனல் மெடிக்கல் ஆபிசர்) பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஆர்.எம்.ஓ.வாக பதவி உயர்வு பெற்றுள்ள டாக்டர் கொளஞ்சிநாதனுக்கு, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு அமைப்புச் செயலாளர் நல்லப்பன் ஆசிரியர், பொருளாளர் புகழேந்தி, சங்க நிர்வாகிகள் புலவர் இளங்கோ, ஜோதி ராமலிங்கம், செல்ல பாண்டியன், வணிக பிரமுகர் சக்திவேல் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.