சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தேரடி அருகில்  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதியசாமி தலைமை வகித்தார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலச் செயலாளர்  முத்துசாமி,  தென்காசி மாவட்ட செயலாளர்  காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் தென்காசி தாலுகா செயலாளர் கணேசன், கடையநல்லூர் செயலாளர்  சம்சுதீன், சிவகிரி வட்டாரச் செயலாளர்  வைரமுத்து, கரிவலம்வந்தநல்லூர்  செயலாளர் அய்யனார், மாவட்ட குழு உறுப்பினர்  மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்  சமுத்திரகனி, சொக்கலிங்கபுரம் செயலாளர்  கணேசன், சுப்பலாபுரம்  செயலாளர்  கணேசன், சங்கரலிங்கபுரம் செயலாளர்  கருப்பசாமி, புளியங்குடி நகர செயலாளர்  காமராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.