மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவன் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை

சென்னையில் மாநில அளவிலான பாக்சிங் (குத்துச்சண்டை) போட்டிகள் 2024 ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜூனியர் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பாக்சிங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை தமிழ்நாடு மாநில பாக்சிங் அசோசியேசன் மற்றும் சென்னை அமெச்சூர் பாக்சிங் அசோசியேசன் இணைந்து நடத்தியது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவன் வி. மோகித், ஜீனியர் மாணவர்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவனை, பள்ளியின் தலைவர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர்.ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.