புதுக்கோட்டை அனைத்து ரோட்டராக்ட் சங்கங்களும் இணைந்து நடத்திய மண்டல கிரிக்கெட் போட்டி

புதுக்கோட்டை அனைத்து ரோட்டராக்ட் சங்கங்களும் இணைந்து மண்டல கிரிக்கெட் போட்டி மற்றும் விதைக்கலாம் அமைப்புடன் இணைந்து மரம்கன்றுகள் நடும் விழாவும் புதுக்கோட்டை ஆட்டாங்குடியில் உள்ள மஹா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை கிங் டவுன்  ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் கான் அப்துல் கபார்கன், கௌரவ விருந்தினர்களாக புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரகாஷ், புதுகை வரலாறின் ஆசிரியரும் புதுக்கோட்டை கிரௌன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் 25 ஆம் வெள்ளி விழா ஆண்டு சிவசக்திவேல்,முன்னாள் தலைவர் அக்பர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

வாழ்த்துரை வழங்கிய மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி 2024-25  ஆண்டு சண்முகவேல், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி 2025-26  ஆண்டு கோபாலகிருஷ்ணன்,மண்டல ரோட்டராக்ட் பிரதிநிதி 2024-25 விமீகா முருகேசன்  நிகழ்ச்சியின் தலைவர் தமோதரன், நிகழ்ச்சியின் செயலாளர் அய்யா பகத் கலந்துகொண்டு போட்டியினை சிறப்பித்தனர். மொத்தமாக ஆறு அணிகள் மூன்று சுற்றுகள் 15 போட்டிகளாக நடைபெற்றது. இத்தொடரில் முதல் பரிசை GPT அணியினரும், இரண்டாம் பரிசை VPTC அணியினரும் மூன்றாம் பரிசை New fort அணியினரும் வென்றனர். இதோடு புதுக்கோட்டை மண்டலத்தின் அனைத்து ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.