மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் வளைகாப்பு விழா

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி அவர்களின் கனவு திட்டமான ஆசை மகள் வளைகாப்பு விழா மற்றும் சத்தான உணவு வழங்குதல் நிகழ்வானது பூங்கா நகர் அங்கன்வாடி மையத்தில்  தலைவர்  மாரி கண்ணு வைரவன் தலைமையில் நடைபெற்றது. இதில்  நகர்மன்ற  தலைவர்  திலகவதி செந்தில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, துணை ஆளுநர் லட்சுமணன்,  பெண்கள் முன்னேற்றம்  மாவட்ட துணை செயலாளர் சினேகா மற்றும்  செயலாளர்  கலாவதி பிரித்திவிராஜ்,  பொருளாளர் மீனு கணேஷ்  உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு  பெண்களுக்கு வளைகாப்பு நடத்தினர். இதில் பங்கேற்றோர் ரோட்டரி வாகை ஆண்டு நிர்வாக குழுவிற்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.