திருமயம் ரோட்டரி சங்கம் இரண்டாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோமதி மஹாலில் போர்ட் ரோட்டரி சங்கம் இரண்டாம் ஆண்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் சென்ற ஆண்டு தலைவராக இருந்த கபூர் மீண்டும் இரண்டாவது ஆண்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு பயணிக்க சென்ற ஆண்டு செயலாளராக பணிபுரிந்த அன்புமணி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து உள்ளார். பொருளாளர் பால்ராஜ் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து உள்ளார். இவர்கள் மூவரும் சென்ற ஆண்டில் தீவிரமாக செயல்பட்டதன் எதிரொளியாக இரண்டாவது ஆண்டிலும் மூன்று நிர்வாகிகளும் பயணிக்க வேண்டும் என நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

இவர்களை வாழ்த்துவதற்காக சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆளுநர் செல்வமணி, கவிஞர் தங்கமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவரும், திருமயம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்பி.கருப்பையா மற்றும் மருத்துவர் கல்.ராமன், திருமயம் அரசு மருத்துவமனை மருத்துவர் கிருபா சங்கர், மருத்துவர் கண்ணன், மருத்துவர் சுஜிதா மற்றும் மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் எய்ம் அறக்கட்டளை தலைவர் சைமன், ஆடிட்டர் பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொறியாளர் பிரிவு அணி அமைப்பாளர் ராமசாமி, வாசகர் வட்ட தலைவர் பிரபு, துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.