‘முதல்வரின் முகவரி’ மற்றும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு

வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு ‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அப்பதவியில் ஐஏஎஸ் அதிகாரி தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு ‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாகவும் அமுதா ஐஏஎஸ் செயல்படுவார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.