புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர்  பி.கருப்பையா விழாவினை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர்  முனைவர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் முனைவர் வீ.திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட பி.எட். மற்றும் எம்.எட். மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.