திருவாசகம் முற்றோதல் 24ஆம் ஆண்டு விழா : ராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ராமலிங்க சுவாமி திருக்கோவில் திருவாசகம் முற்றோதல் 24-ம் ஆண்டு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவபக்தர்களுக்கு இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு மூன்று வேலை அன்னதானம் வழங்கி தலைமையேற்று விழாவை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், வ.உ.சி.தென் மண்டல பேரவை தலைவர் பணகுடி மு.சங்கர், வ.உ.சி. தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவகுருநாதன், பாலமுருகன், தண்டயுதபாணி, பரமசிவன் பிள்ளை, முருகானந்தம், நெல்லையப்பர் அறங்காவலர் குழு உறுப்பினர் கீதா பழனி, வசந்தா, ராமலிங்க சுவாமி கோவில் பூசாரி செந்தில் பட்டர் மற்றும் ராமகிருஷ்ணா நற்பணி மன்றம் நிர்வாகிகள், சிவபக்தர்கள், பொதுமக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.