புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கத்தின் 2024 – 25ம் ஆண்டு பணியேற்பு விழா

புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கத்தின் 2024 – 25ம் ஆண்டு பணியேற்பு விழா புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு அரிமா சங்க ஆளுநர் பொறுப்புகளை பணியேற்பு செய்து வைத்தார். அதன்பின்பு 2024 – 25 ஆம் ஆண்டு ஒவ்வொரு துறையிலும் வெகு சிறப்பாக பணியாற்றிய சேவை சங்கங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மாணவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் பல்வேறு யுத்திகள் மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வெகு சிறப்பாக செயலாற்றி வருகிறது என்பதை அறிந்து இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த சேவை சங்கத்திற்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் சேட்டு (எ) அப்துல் ரகுமான்  பெற்றுக் கொண்டனர். இந்த விருதினை புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்க தலைவர், மாவட்ட ஆளுநர் மற்றும் லைன் சங்க நிர்வாகிகள் உடனிருந்து வழங்கி பாராட்டினர்.