புதுக்கோட்டை கம்பன் பெருவிழா பந்தல் கால் முகூர்த்தம் நடப்பட்டது

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 49 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை முன்னிட்டு விழா அரங்கம் அமைப்பதற்காக நகர் மன்ற வளாகத்தில் பந்தல் கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஜெபிக்க பூஜைகள் நடைபெற்று மா இலை கட்டிய புனிதக் கம்பத்தில் மஞ்சள்,குங்குமம் பூசி நல்ல நேரத்தில் பலரும் சேர்ந்து முகூர்த்தக்கால் நட்டார்கள். ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கமும் மேடையும் அமைக்கப்படுகிறது. ஜூலை இம்மாதம் 12 தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 10 நாட்கள் கம்பன் பெருவிழா நடைபெறுகிறது.