புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ட்ரோன் செய்முறை பயிற்சி வகுப்பு

நான் முதல்வன் திட்டத்தில் புதுக்கோட்டை – மச்சுவாடி  அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில்  தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு ட்ரோன் செய்முறை பயிற்சி வகுப்பு.

புதுக்கோட்டை – மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இரண்டாம் ஆண்டு வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சியானது பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சியானது ஐ.ஐ.டி., வாயுசாஸ்த்ரா, ஏரோஸ்பேஸ் – சென்னை நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் ட்ரோன்கள்  செய்யும் முறை மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதில் பயிற்சியாளராக செல்வி. முத்துலெட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்தார். மேலும் இப் பயிற்சியில் கலந்து கொண்ட  மாணவர்களை வகுப்பாசிரியர் பாரதி மற்றும் பள்ளியின் நான் முதல்வன் திட்ட பொறுப்பு ஆசிரியர்கள் பிரபு மற்றும் இளவரசி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.