புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைமணி (Educationist & Merchant Navy Officer)  பங்கேற்று  ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எதிர்கால வழிகாட்டுதல் முறைகளை வழங்கியும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தும் கலந்துரையாடினார். 

பள்ளியின் முதல்வர்  சிராஜுதீன்  சிறப்பு விருந்தினரை வரவேற்று  கவுரவித்தார்.  விழாவில் பள்ளியின் தலைவர்  தேனாள் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, நிர்வாக உறுப்பினர்  சுப்பிரமணியன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.