புதுக்கோட்டையில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் துவங்குகிறது

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் இணைந்து நடத்தும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயற்சி வகுப்புகள் மா.மன்னர் கல்லூரியில், வரும் 6.7.2024 சனிக்கிழமை தொடங்கவிருக்கிறது. இந்த வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், இந்தப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு தேர்வாணயம் நடத்திய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களால் நடத்தப்படுகிறது என்றும் தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும், முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த வகுப்புகள் தொடர்பான விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், 9786441417, 9445955451,9943832324.