அறந்தாங்கி அருகே கல்லுக்கால் ஊன்றும் வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செவிடங்காடுகிராமத்தைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (28) என்ற இளைஞர் தனது நண்பர்கள் 5-க்கும் மேற்பட்டோருடன் இடையன்காடு கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவருடைய வீட்டிற்கு  கல்லுக்கால் ஊன்றும்  வேலைக்கு  சென்றுள்ளார். 

சுல்தான் வீட்டில் பழைய கல்லுக்கால் ஊன்றி இந்த இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு கல்லுக்கால் ஊன்றுவதற்காக  கடப்பாரையால் குழி தோண்டிஉள்ளார். அப்போது தரைப்பகுதியின் கீழ்வழியாக சென்ற மின்சார ஒயரில் கடப்பாரை பாய்ந்ததால் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜய்ஆனந்த் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனடியாக சக நண்பர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு விஐய்ஆனந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த

ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லுக்கால் ஊன்றும் வேலைக்கு சென்ற இளைஞர்களிடம் தரைப்பகுதியில் மின்ஒயர்  சென்றதை வீட்டின் உரிமையாளர் கூறாததால் இச்சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.