நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) குளறுபடிகளைக் கண்டித்தும் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மன்னர் கல்லூரி கிளைத் தலைவர் வி.தாரணிபிரியா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன் கண்டன உரையாற்றினார். சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலளர் தனுஷ் நன்றி கூறினார்.

இதேபோல், கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பூவராகவன் தலைமையில், ஹரிராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.