கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு, நகராட்சியுடன் இணைந்து நெகிழி பை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் சர்வதேச நெகிழிப் பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு, கடையநல்லூர் நகராட்சியுடன் இணைந்து நெகிழி பை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, மீண்டும் மஞ்சப்பை,  போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி  தங்க நகைக்கடை  வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் தலைவர் காளிதாஸ் தலைமையில்  நடைபெற்றது. செயலாளர் காளிமுத்து வரவேற்பு உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா  பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா,  முத்திரை ஆய்வாளர் நாகராஜன்  சிறப்புரையாற்றினார்கள். நாகராஜனுக்கு கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பாக சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகைக்கடை, காய்கறி கடை,  மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டிறைச்சி வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.