ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி 6 வது நிகழ்வு துவக்க விழா

புதுக்கோட் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் புதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 6 வது நிகழ்வு துவக்க விழா எம். எஸ். சுவாமிநாதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு எம். எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் நேக்ககமாகும். இதுவரையில் 5 நிகழ்வுகள் நிறைவு பெற்றுள்ளது.

150 மாணவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில்   பங்கேற்ற மாணவர்களின் அறிவு, கற்றல்திறன், அறிவியல் ஆர்வம், அறிவியல் மணப்பான்மை மற்றும் விழிப்புணர்வு, புதியவைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வம்,   உணவு உண்பதில் மாற்றம் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஆகியவை மேம்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகிறார்கள்.