பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கல்விக்கு உதவி

திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளை புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்களின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பள்ளத்தூரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ம‌ற்றும் தாய், தந்தையை இழந்த மூன்று மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளத்தூர் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கர் அறக்கட்டளை உறுப்பினர் முத்துகாரி மற்றும் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அறக்கட்டளையின் சார்பாக பொதுச்செயலாளர் சதன் குமார் மற்றும் கல்விக்குழு தலைவர் தாமோதரன் கலந்துக்கொண்டனர். பஞ்சாயத்து தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களை மாணவிகளுக்கு வழங்கினார்கள். தாமோதரன் நன்றி கூறினார்.