எண்ணும் எழுத்தும் பயிற்சி  குன்றாண்டார்கோயில் ஒன்றிய ஆசிரியர்கள் பங்கேற்பு

1 முதல் 3 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் கலந்துகொண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக ஆசிரியர் கே.ஆர்.இரமேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பரிமளம், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பழனிச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், தங்கம்ஆகியோர் கலந்து கொண்டனர். குன்றாண்டார்கோயில் ஒன்றியத்தைச் சேர்ந்த 110 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியப் பயிற்றுநர் சாந்தி நன்றி கூறினார்.