கரூரில் துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு

துணி காய வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்தனர். லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (68). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை சுமார் 7.30 மணிக்கு வீட்டின் முன் உள்ள பந்தலில் தாத்தா சீனிவாசனும், பேரன் திருக்குமரன் இருவரும் துணி காய வைக்க முயன்றுள்ளனர்.

அப்போது பந்தலில் போட்டிருந்த மின் விளக்கில் இருந்து கசிந்த மின்சாரம் தாக்கியதில் இருவரும் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.