மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதினொன்றாவது பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர்,  மேட்டுச்சாலையில்  அமைந்துள்ள  மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதினொன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது.

இவ்விழாவிற்கு நிறுவனர் முனைவர். சின்னத்தம்பி தலைமை வகித்தார். தாளாளர் உதயகுமார் முன்னிலை  வகித்தார்,  இயக்குநர், முனைவர். திருமா. பூங்குன்றன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.  தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக  மேனாள் துணைவேந்தர் முனைவர் திருமலைசாமி சுமார் 800 மாணவர்களுக்கு மேலாக பட்டங்களையும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பல்வேறு துறைகளில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு  நினைவுப்பரிசும் வழங்கி பேருரை ஆற்றினார். கல்லூரி முதல்வர்  முனைவர். நல்லதம்பி நன்றியுரை ஆற்றினார். துணை முதல்வர் பேரா. தாமோதரன்  விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து  இருந்தார்.