புதுக்கோட்டையில் பத்தாவது சர்வதேச யோகா தின விழா

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆத்மா யோகா, ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல் மற்றும் புத்தாஸ் இளையோர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பத்தாவது சர்வதேச யோகா தின விழா இன்று மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்றது.

யோகா பயிற்றுநர் யோகா பாண்டியன் வழிகாட்டுதலில் நடைபெற்ற யோகா பயிற்சியில் சுமார் 150 இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்றனர்.  நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர், திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார், ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் ரஞ்சித், புத்தாஸ் விளையாட்டு மேம்பாட்டு நிறுவன தலைவர் சேது கார்த்திகேயன் மற்றும் பாபு, மருத்துவர் ராமமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வீரமுத்து ஆகியோரும் யோகா பயிற்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் ராஜேஷ் கண்ணன், இந்துஜா லாவண்யா மற்றும் ஸ்வர்ணா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.