கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பாக ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கொடியேற்றி கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பெரிய பள்ளிவாசல் முன்பாக ராகுல் காந்தியின் 54-வது பிறந்த தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்டக்காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயலாளர்  ஆலங்குளம் செல்வராஜ், மாவட்டக் காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரையா, செங்கோட்டை  முன்னாள் சேர்மன் சட்டநாதன், மாவட்ட செயலாளர்  கிளங்காடு மணி சுரண்டை, நகராட்சி தலைவர் வள்ளி முருகன், மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை,  செங்கோட்டை ஒன்றிய தலைவர்  கதிரவன், தெற்கு வட்டார தலைவர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எம்.ஏசர்புதீன் 200 பிரியாணி பொட்டலங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பி.சமுத்திரம் இனிப்புகளை வழங்கினார்‌. நகர காங்கிரஸ் தலைவர் எம்.அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர பொது செயலாளர் எஸ்.ஓம்பிரகாஷ் சுந்தரபாண்டியன், நகர பொருளாளர் எம்.எம்.அபுபக்கர், மாவட்ட பிரதிநிதிள் குருநாதன், அப்துல்லா, சேகனா, செல்லக்குமார், ஆசிரியர் அன்னாவி சேகனா, மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் பைஜல், மாநில ஐஎன்டியுசி செயலாளர் கே.ரவி, நகர காங்கிரஸ் செயலாளர்கள் மன்மோகன் குமார், துறாப்ஷா, மூத்த காங்கிரஸ் முன்னோடிகள் எஸ்.கே.லத்திப்முகம்மதுஷா, திருமலை, ஒசலாத்தன் யூசுப், மொ.முகம்மதுஷா கலந்துகொண்டனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.மஸ்தான் நன்றி கூறினார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில ராஜீவ் காந்தி  நற்பணி மன்ற செயலாளர் கே.எஸ்.கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.