புதுக்கோட்டையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 20ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் – தமிழ்நாடு மின்சார வாரியம்

புதுக்கோட்டை 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், அன்னச்சத்திரம், மறைமலை நகர், நியூ டைமண்ட் நகர், வள்ளியப்பா நகர், மலையப்பா நகர், பாரி நகர், மாலையீடு, சிவகாமிஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் 20.06.2024 அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற் பொறியாளர், இயக்கலும், காத்தலும்/நகர்/புதுக்கோட்டை அறிவித்துள்ளார்.