புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தில் பேரரசி இராணிமங்கம்மாள் 375ஆம் ஆண்டு பிறந்த விழா கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்க செயலாளர் அ.ஜனார்தனம் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பேரரசி மதுரை இராணியார் மங்கம்மாள் அவர்களின் 375ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று நம் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.என்.இராஜேந்திரன் நாயுடு இராணியாரின் திருஉருவப் படத்தை மாவட்டத் தலைவர் லயன்ஸ் ஜெ.கண்ணன் நாயுடுவிடம் அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் பேரரசி இராணிமங்கம்மாள் திருஉருவப் படத்திற்கு தலைவர் லயன்ஸ்.ஜெ.கண்ணன் நாயுடு, துணைத் தலைவர் கே.என்.இராஜேந்திரன் நாயுடு, பொருளாளர் ஆர்.ஜெயராமன் நாயுடு, செயலாளர் அ.ஜனார்தனம் நாயுடு, துணைச் செயலாளர் கோ.இராகவன் நாயுடு, ஒருங்கிணைப்பாளர் டி.பெருமாள் நாயுடு, சுரேஷ் நாயுடு, மேட்டுப்பட்டி தர்மராஜ் நாயுடு, ராகவி எலக்ட்ரிகல்ஸ் கண்ணன் நாயுடு, சார்லஸ் நகர் மின் பொறியாளர் வேணுகோபால் நாயுடு, சங்க மேலாளர் ச.தேவராஜன் நாயுடு ஆகியோர் மாலை அணிவித்து இராணியாரின் பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தார்கள்.