நாளை மறுநாள் புதுக்கோட்டையில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்  

நாளை மறுநாள் வியாழன்கிழமை புதுக்கோட்டையில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்  நடைப்பெற உள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை  வருமான வரி அலுவலர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

வரும்,13.06.2024 அன்று மாலை 4 மணியளவில், திருக்கோகர்ணம் அன்னவாசல் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமானவரி அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் வருமான வரிவிழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது. வருமான வரி செலுத்துவோர்கள் மற்றும் அது தொடர்பான தகவல் பெற விரும்புபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு வருமான வரி அலுவலர் சுரேஷ் குமார் பதிலளிக்க உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.