முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் : சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த போது, கடந்த 1990-ம் ஆண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிர் இழந்தார். ஸ்ரீபெரும்புதூரில் அவர் உயிரிழந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் டெல்லியில் அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, தாய் இந்திரா காந்தி, சகோதரர் சஞ்சய் காந்தி, ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ’வீர் பூமி’ என்ற இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, வீர் பூமியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.