ஒரே நாளில் 2 வங்கிகளில் கொள்ளை முயற்சி. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் இருவேறு வங்கிகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வேளாண் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், மானிய விலையில் வழங்கப்படுவதுடன், நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு வேளாண் கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை துண்டித்தும் கதவினை உடைக்கவும் முயற்சித்துள்ளனர்.

இன்று காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள், வங்கியின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை முயற்சி சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள், வங்கியின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை முயற்சி சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை சென்றதை அடுத்து, கூட்டுறவுச் செயலாளர் விரைந்து சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையின் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை முயற்சி சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது.

இதே போல் மானாமதுரை அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் இந்தியன் வங்கிக்கு நேற்று நள்ளிரவில் சென்ற கொள்ளையர்கள், வங்கியின் ஜன்னல் மற்றும் நுழைவாசல் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். தொடர்ந்து வங்கிக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்த நிலையில், கொள்ளையர்கள் வங்கியிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்..