பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வில்  அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளி சாதனை

புதுக்கோட்டை – மச்சுவாடி , அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளி – பத்தாம் வகுப்புத் தேர்வில்  முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டு.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை -மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர் , ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதில் பள்ளியில் தேர்வு எழுதிய – 37மாணவ மாணவிகளில் 36  மாணவ மாணவிகள்

தேர்ச்சி பெற்று  97.36  தேர்ச்சி சதவீதத்தினைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் அட்சயா என்ற மாணவி 500 க்கு 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.  மேலும் பிரபாகரன் என்ற மாணவர் 474 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் நவீன் என்ற மாணவர் 468 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் சிறப்பாகப் பணியாற்றிய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்  குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.