வெயிலில் இருந்து வந்ததும் ஐஸ் வாட்டர் குடித்தால் ஆபத்து சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மே மாதம் முடியும் வரை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். அதனால், மதிய வேளையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நோயாளிகள், கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ் போடாமல் பழச்சாறு அருந்தலாம். இளநீர் பருகலாம். இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பயணத்தின் போது பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி, டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள், ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை ரத்த நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும்; ஆபத்தில் இருந்தும் தப்பலாம். மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.