புதுக்கோட்டை – மச்சுவாடி, அரசு முன் மாதிரி மேல் நிலைப்பள்ளி,+2 இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் சாதனை

நடந்து முடிந்த  +2 இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 135 பேரில் 134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று {மாணவர்கள் 93 தேர்ச்சியுற்றோர் – 92 மாணவிகள் – 42 அனைவரும் தேர்ச்சி} 99.25 தேர்ச்சி சதவீதம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 3 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் இதில்  விவசாய பாடப் பிரிவை சேர்ந்த  காசி விஸ்வநாதன் என்ற மாணவர் 526 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கணினி அறிவியல் பாடத்தில் 1 மாணவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொருளியல் பாடத்தில் மாணவர்களது சரசரி மதிப்பெண்கள் 80 ஆகவும், இருவர் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பாகப் பணியாற்றிய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்களை பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்  குழு உறுப்பினர்கள் பாராட்டி வருகின்றனர்.