புளியங்குடியில் குளுகுளு புஷ் பேக் வசதியுடன் எஸ்.எஸ்.எஸ். மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பு

oppo_0

தென்காசி மாவட்டம்- புளியங்குடியில் குளுகுளு புஷ் பேக் வசதியுடன் பல கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் எஸ்.எஸ்.எஸ். மல்டிபிளக்ஸ் திரையரங்கம் முன்னாள் மத்திய அமைச்சர்ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.எஸ் திரையரங்கில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த திரைப்படம் ரோமியோ, ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் டியர் திரைப்படங்களின் காட்சிகளுக்கு முன்னாள் போக்குவரத்து துறை அதிகாரி கருத்துத்துரை டிக்கெட் கம்ப்யூட்டர் கவுண்டரை திறந்து வைத்து ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த விலை கட்டண கவுண்டரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திரையரங்கு உரிமையாளர் பி.சுப்பையா நாடார், எஸ். செல்வ பிரகாஷ், எஸ். காமராஜ், பி.ஜே. பிரதாப் ராஜா பி.எஸ்.எஸ். மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர், கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.நெடுஞ்செழியன், செயலாளர் ஜெயபிரகாசம், தொழிலதிபர்கள் சந்திரசேகரன், வெங்கடேஷ்,  தேவராஜ், சுப்பிரமணியன் சி.என்.வில்லேஜ் திருநெல்வேலி, வழக்கறிஞர் நல்லபெருமாள் விருதுநகர் ஆகியோர் உடன் இருந்தனர்.