திருவருள் பேரவை சார்பாக இஸ்லாமிய சகோதர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம் அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமுக நல்லிணக்க மேம்பாட்டிற்காக வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுவருகிறது.

இதனை முன்னிட்டு இன்று திருவருள் பேரவை சார்பாக இஸ்லாமிய  நண்பர்களுக்கு வாழ்த்துவதற்காக ஈத்கா அரபி கல்லூரி வளாகத்தில் சென்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை டவுன் அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் லியாகத் அலி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட காஜி சதக்த்துல்லா குத்பா பேருரை ஆற்றினார். இதில் துணைத்தலைவர் ஹாஜி முகமது சபியுஃதீன், செயலாளர் மருத்துவர் சலீம், ஜெ ராஜா முகமது, முருகையன், மாவட்ட வர்த்தக கழக நிர்வாகிகள் ஹாஜி சாகுல் ஹமிது, சவரி முத்து, அஸ்ரப் அலி, ராஜா முகமது, ரோட்டரி சங்க சார்பாக லேணா செக்கலிங்கம், பி எஸ் கருப்பையா, கதிரேசன், ராஜா முகமது, ராமு கண்ணு, மத்தியாஸ், ஆரோக்கிய சாமி, கதிரேசன்,   வழக்கறிஞநர் சங்க சார்பாக சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துகள் கூறினர். புதுக்கோட்டை டவுன் அனைத்து ஜமாத் கமிட்டி துணை செயலாளர்   இப்ராஹிம் பாபு நன்றி கூறினார்.