புதுக்கோட்டை அசோக்நகர் பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை அசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவில் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்புரையாற்றினார்.  ஆசிரியர்  பழனிச்சாமி விழாவினை ஒருங்கிணைத்தார். புதுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர்கள் கவி வேந்தன், பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேவா பள்ளி மேலாண்மை குழு தலைவர் பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி மாணவர்களைப் பாராட்டினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சமீம்பானு, ஜீனத் நிஷா பேகம், அனுபமா, அனுசியா, சத்யா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியர் கஸ்தூரி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள்  ஊர் பொதுமக்கள் சத்துணவு பணியாளர்கள் முன்னாள் மாணவர்கள் கல்வியாளர்கள் புரவலர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.