முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

அன்னவாசல் அருகே உள்ள  முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மன்னர் கல்லூரி ஆங்கில பேராசியர் அய்யாவு, டாக்டர் சலீம் தலைமை ஆசிரியர்கள் (வயலோகம்) ஜெயராஜ், (இலுப்பூர்) ஜான்பிரிட்டோ டாக்டர் அமாணுல்லா, அதாய் அரப்பிக்கல்லூரி முதல்வர் இம்ரான்கான், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது இதில் சாகுல்அமீது, காதர்மெய்தீன், சாதிக்பாட்சா, முகமதுகனி, முபாரக், மீரான், சாமிக்கண்ணு, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழுவினர்கள் கலந்து கொண்டானர்.