தமிழக மக்களின் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி

தேராகால்புதூர், கங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் அறிவுரையின்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாய் ஒலித்திட வேண்டி நமது கோரிக்கைகளை வேண்டிப்பெற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதி தயாரிப்புக்குழுவிடம்  கடையநல்லூர் நகரச் செயலாளர் எஸ்.அப்பாஸ் நகரத்திற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், டெல்லி தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் செ.சு.செண்பக விநாயகம், கலை இலக்கிய அணி கருப்பண்ணன், காளிமுத்து, எஸ்.எம்.அப்துல் மஜீத், சாகுல் ஹமீது, தென்காசி தெற்கு மாவட்ட  பொறியாளர் அணி  அமைப்பாளர் குமார், ரபீக்,காலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.