எம்.ஆர்.  கல்லூரியில் வெற்றி நிச்சயம் வழிகாட்டி நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களில், 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான வெற்றி நிச்சயம் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 1500  மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன்  தலைமை தாங்கினார். இயக்குனர் முனைவர் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன், நிர்வாக இயக்குனர் முனைவர் க.செந்தில்குமரன், இரா.கார்த்திகேயன் மற்றும் முதல்வர்கள் முனைவர் மதியழகன், முனைவர் சங்கீதா,  முனைவர் சம்பத், முனைவர் மாலதி, பொறியாளர் சிவசங்கர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக பட்டிமன்ற நடுவர் நகைச்சுவை அருவி, மதுரை முனைவர் தமிழ் இனியன், தன்னம்பிக்கை பேச்சாளர் மதுரை பத்திரிகையாளர் நவ்ஷாத் ஆகியோர்  கலந்து கொண்டு எதிர்கால கல்வி, தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள்,  தன்னம்பிக்கை என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு தேவையான கருத்துக்களை கூறினார்கள். அதனை தொடர்ந்து மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் முனைவர் வை.தியாகராஜன்  உடலும் உள்ளமும் என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியினை  மீனாட்சி இராமசாமி  கல்வியியல் கல்லூரி மாணவி பவித்ரா தொகுத்து வழங்கினார்.

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள், இந்த நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, தேர்வை எதிர்கொள்ள உற்சாகம் அளிப்பதாக இருந்தது என மகிழ்வுடன் மேடையில் ஏறி கூறினர். பொறியியல் கல்லூரி முதல்வர் மதியழகன் நன்றியுரை கூறினார்.