செவல்குளம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி 

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், செவல்குளம் ஊராட்சி, செவல்குளம் கூட்டுறவு  தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் 12 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் உமா மகேஸ்வரி,  தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் நரசிம்மன் தலைமை வகித்தனர். குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை  முன்னிலை வகித்தார். கள மேலாளர் ஜெயராம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன்களை வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வக்கீல் அணி பிரபாகரன், நெசவாளர் அணி குமார் சங்கர்,  விவசாய அணி சேர்மன் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கசெயலாட்சியர் விஜயகுமார், சரக மேற்பார்வையாளர்கள் ரவிக்குமரன், ஆறுமுகவேல், கண்ணன், சங்க செயலாளர் மீனாட்சி, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மாடசாமி, கவுன்சிலர் மணிமேகலை,  கிளைச் செயலாளர்கள்  கார்த்திக் ராஜ், முத்துராஜ், மாடசாமி, திமுக இளைஞர் அணி பாலமுருகன் மகேந்திரன், முருகன், ஜலால், ஜெயக்குமார், செந்தில் மற்றும் சங்க பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி குட்டி நன்றி கூறினார்.