அரியலூரில் காடுவெட்டி குரு 62-வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக சார்பில் அன்னதானம்

அரியலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காடுவெட்டி குரு 62-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த காடுவெட்டி குரு 62-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் அண்ணா சிலை பின்புறம், சக்தி விநாயகர் கோவில் அருகே, ஏழை, எளிய மக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற, இந்த அன்னதான நிகழ்ச்சியில், அரியலூர் நகரை சேர்ந்த எழில் ராஜா, பழனிச்சாமி உட்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.