LATEST ARTICLES

ஆப்கானில் அந்நியச் செலாவணியை தங்களது தேவைக்காக பயன்படுத்த தடை : மீறினால் வழக்கு தொடரப்படும் – தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானில் அந்நியச் செலாவணியை தங்களது தேவைக்காக பயன்படுத்த தடை விதிப்பதாகவும், மீறினால் வழக்கு தொடரப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், தற்காலிக அரசை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். உலக நாடுகளின் பொருளாதார உதவியால் சீரடைந்து வந்த ஆப்கான்,...

உளுந்தூர்பேட்டை : போலி பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும் 1,134 மது பாட்டில்கள் பறிமுதல்...

உளுந்தூர்பேட்டை அருகே போலியான பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும் 1,134 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்து...

மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வானதன் மூலம் அதிமுக சார்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை...

கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக ரூ.51 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் – அமைச்சர்...

கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக ரூ.51 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளிட்ட அறிவிப்பில், சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி...

இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் –...

இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வழியே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,...

கொரோனா : 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்த...

ஆசிரியர்களுக்கான இணைய வழி கணினி பயிற்சியில் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் : சாமி.சத்தியமூர்த்தி தகவல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர  5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி செய்திக் குறிப்பில்...

பால் உற்பத்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கங்கள் நெய் வாங்க வற்புறுத்த கூடாது : விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

பால் உற்பத்தியாளர்களிடம் நெய் வாங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்த கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் அதன் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தழிழக முதல்வர், விவசாயம் பால்வளம் மற்றும் கூட்டுறவுத்துறை...

கோவை : கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலி – வாளையாறு எல்லையில் மாவட்ட கலெக்டர் சமீரண் ஆய்வு

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியால் கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட கலெக்டர் சமீரண் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக - கேரளா  எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர்...

கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்தவர் மதியரசன்(27). இவருக்கு திருமணமாகி 45 நாட்களே ஆகிறது. மதியரசன் அவருடைய சகோதரி மகன் ஆசாத்(12) இருவரும் கறம்பக்குடி அருகேயுள்ள...

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜல்லி எளிமையாக கிடைக்க செய்ய வேண்டும் – தமிழக...

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அகில இந்திய கட்டுனர் சங்கம் தஞ்சை மைய கட்டடத்தில் தமிழ் மாநில நெடுஞ்சாலை குழு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் குழு சார்பில் தலைவர் எம்.அய்யப்பன் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அகில இந்திய கட்டுனர் சங்க தமிழ் மாநில நெடுஞ்சாலை குழுத்தலைவர்...

மயிலாடுதுறை : முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ். இவர் பூம்புகார் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அண்மையில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் பூம்புகார்...

புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பும் ரோட்டரி சங்கங்களும் இணைந்து இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்...

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : சட்டசபையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பில் கூறியதாவது:- இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். 95 வயது வரை போராடியவர்...

மதுரையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் – 8 பேர்...

மதுரையில் வாகன சோதனையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.81 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.81 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22,15,18,424 பேர்...

தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இலவசம் : உள்ளிருப்பு போரட்டத்தில் இறங்கிய பழனி மொட்டை அடிக்கும் ஊழியர்கள்

பழனி முருகன் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் (சரவணப்பொய்கை) தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்க இலவசம் என தமிழக அரசு அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்த நிலையில், திண்டுக்கல்...

டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை : நீதி கிடைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சங்கம் விகார் பகுதியில் கூட்டுகுடும்பத்துடன் வசித்து வந்த 21 வயதான இளம் காவல்துறை அதிகாரி நான்கு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள சிவில்...

டோக்கியோ பாராலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்தியா : 19 பதக்கங்களை வென்று 24வது இடம் பிடித்து சாதனை

டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக.24ம் தேதி துவங்கியது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து...

நாமக்கல் : ஆஞ்சநேயர்கோயில் குடமுழுக்கு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு பக்தர்கள் நன்றி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இணை கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பக்த சபாக்கள் மற்றும் திமுக நகர பிரமுகர் டி.டி.சரவணன் உட்பட பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது நாமக்கல் சட்ட மன்றத்...

தரங்கம்பாடி : சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – 6 மாவட்ட...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண  மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 63 மீனவ கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமம்...

நாமக்கல் : பொதுமக்கள் சார்பில் 2000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே பொதுமக்கள் சார்பில் ஏரிக்கரையில் பனை விதை விதைக்கும் பணி இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஏரிக்கரையில் நேற்று சின்னகரசப்பாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர் மன்றத்தார் இணைந்து சுமார் 2000 பனை விதைகள் விதைத்தனர். இப்பணிக்கு விவசாய அமைப்பினரும் உறுதுணையாக...

கறம்பக்குடியிலிருந்து புதிய பேருந்து வழத்தடங்கள் : எம்எல்ஏ எம்.சின்னத்துரை தொடங்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து இரண்டு பேருந்து வழித்தடங்களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை இன்று தொடங்கி வைத்தார். கறம்பக்குடியிலிருந்து பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி வழியாக பட்டுக்கோட்டைக்கும், கறம்பக்குடியிலிருந்து அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, கறம்பவிடுதி, மணமடை, கிளாங்காடு, முதலிப்பட்டி வழியாக தஞ்சாவூருக்கும் பேருந்துவசதி வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய...

கவிராசன் அறக்கட்டளை நடத்திய “நட்சத்திர ஆசிரியர்” விருதுகள் வழங்கும் விழா

கவிராசன் அறக்கட்டளை நடத்திய "நட்சத்திர ஆசிரியர்" விருதுகள் வழங்கும் விழா மற்றும் "புதுமைப் புதையல்" நூல் வெளியீட்டு விழா, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரங்கத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற தேசிய நல்லாசிரியர் விருதாளர், தங்கம் மூர்த்தி, சிறந்த ஆசிரியர்களுக்கு, "நட்சத்திர ஆசிரியர்"  விருதுகளை வழங்கி,...

புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு விரைவாக கோவிட் 19 தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஏற்கனவே புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் காமராஜபுரம், கோவில்பட்டி...

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல மாதங்களாக ஏடிஎம் வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏடிஎம் வாசலில்...

பஞ்சு மீதான 1% வரி நீக்கம் : தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் – தென்னிந்திய...

பஞ்சு மீதான 1% வரி நீக்கத்தால் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நாட்டில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 110 முதல் 120 லட்சம் பேல்...

ஆசிரியர் தினத்தையொட்டி இணையம் வழியாக ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொன்ன பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி இணையம் வழியாக ஆசிரியர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வாழ்த்து கூறினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும், கவிதை சொல்லியும், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை...

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை சங்க தலைவர் துரை மணி தலைமை தாங்கினார். தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்எஸ் காசிநாதன் அனைவரையும்  வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  நகராட்சி ஆணையர் ...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.74 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.74 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22,10,76,015 பேர்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,766 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு

கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு...

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில் இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து நீதி வேண்டி போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கணக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த...

கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் – போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில் உள்ள அரசு சார்நிலை கருவூல அலுவலகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக...

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார்...

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(40). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இந்நிலையில் நேற்று ராஜேஷ்குமார் தனது தாயாருடன் வீட்டை...

நாமக்கல் : மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகரின் மகன் – 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி...

நாமக்கல்லில் மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகர் மகனின் 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி நவிழும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு நகரத்தின் பொறுப்பு குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி மகன் கி.அஜித்குமார் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மறைவு...

மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்

மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெறும் இலவச பதிவு முகாம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்த இம்முகாம் மாவட்ட...

பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொய்வின்றித் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை இன்று பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக...

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க மஜக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மஜக மாவட்டசெயலாளா் முகமது ஜான் விடுத்துள்ள கோரிகையில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது அவசர மற்றும் புறநோயாளிகள் அதிகளவில் வருவகின்றனா். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை...

புதுக்கோட்டை : அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – முதன்மைக்கல்வி அலுவலர்...

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கடந்த 1ம் தேதி (புதன்கிழமை) முதல் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலோடு...

பட்டுக்கோட்டையில் 7 வயது சிறுவன் 1 மணி நேரத்தில் 18.4 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா தம்பதியின் 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கும் நலன்ராஜன்  உலக சாதனைக்காகவும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காகவும் சாலையில் 1 மணி நேரத்தில் 18.4 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தார். மாணவர்...

அறந்தாங்கி வட்டார விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கண்டுணர்வு பயணம்

அறந்தாங்கி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு மின்னனு மூலமாக வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் செய்தல் பற்றிய விவசாயிகள் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்...

வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

கிருஷ்ணகிரியில் பெய்துவரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி பழைய பேட்டை 12வது வார்டில் உள்ள நல்லதம்பி செட்டி தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து...

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து : கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழப்பு

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று லட்சுமி நகர்...

நகைக்கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவி கைது

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் கிரண்குமார்(42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு நகை வாங்குவதுபோல் பர்தா அணிந்து 35...

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததை...

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் செப்டம்பர் 2021 மாதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர சிறப்பு அரும்பொருள் (புதிய கற்கால கைக்கோடரி) பற்றிய குறிப்புகள். புதுக்கோட்டை அரசு...

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக புகார்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் செல்வநாயகம் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,618 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

‘முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்’ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் 'முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று...

இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இரண்டு லட்சம்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோதும் வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி...

பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் கர்நாடக இளைஞர்

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் வயது 22. பி.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ் இறுதியாண்டு மாணவரான பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்...

ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் – கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகேசன் மகன் செல்லகணபதி (எ) விஜய்(21). இவருக்கும் மற்றுமொரு தரப்பினருடன் ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் கோஷ்டி...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,352 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அப்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது....

அரசு ஊழியர்களின் மாதாந்திர பிடித்தம் ரூ.60ல் இருந்து ரூ.110 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன.1ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும்...

மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் – உச்சநீதிமன்றம் வருத்தம்

மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அடியெடித்து வைக்கும்போது டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்....

நாமக்கல் : கொல்லிமலை அடிவார பகுதியில் மாணவர் படிப்பிற்காக புதிய செல்போன் டவர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய செல்போன் டவரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமகிரிபேட்டை ஒன்றியம் பெரப்பன்ஞ்சோலை ஊராட்சி பள்ளிப்பாறையில் தொலைபேசி சிக்னல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு...

வலி மற்றும் நோய்த் தணிப்பு சிகிச்சை மற்றும் இன்பவனம் திறப்பு விழா

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு தரைதளத்தில், அவசர அறுவை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையத்தினை கல்லூரி முதல்வர் மு.பூவதி இன்று திறந்து வைத்தார். இங்கு நோய் முற்றிய நிலையில் உள்ள பக்கவாதம், புற்றுநோய் மற்றும் HIV போன்ற தொற்று...

மருத்துவ படிப்பு : வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத தமிழக மாணவர்களின் இணைய வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் – கமல்ஹாசன்...

வெளிநாடுகளில் மருத்துவ படிக்கும் தமிழக மாணவர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று பயில முடியாத நிலையில் அவர்களுக்கு இணைய வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது:- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர்...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை : மயிலாடுதுறையில் விநாயகர் சிலைகள் தேக்கத்தால் மண்பாண்ட தொழிலாளர்கள்...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் மயிலாடுதுறையில் பல லட்சம் மதிப்பிலான மண் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் மா.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை...

உளுந்தூர்பேட்டை : 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர்...

உளுந்தூர்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்...

டெங்கு காய்ச்சல் : உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் ஒரே வாரத்தில் 40 உயிரிழப்பு – பொதுமக்கள் அச்சம்

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் டெங்கு காய்ச்சலால் ஒரே வாரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் மர்ம...

தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் : பல பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தொடர்ந்து இன்றும் 3வது நாளாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்...

இந்தியாவில் அனைத்து தொகுதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்க கோரிக்கை

இந்தியாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தலைமையிடத்தில் அதன் உறுப்பினர்களுக்கு மக்கள் பணியாற்ற மத்திய அரசு அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் பாரத பிரதமர், பாராளுமன்ற...

வீராணக்குன்னம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணக்குன்னம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழிகாட்டலில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர்...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 45.45 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.45 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,92,64,009 பேர்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,092 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான்

ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருகினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமியின் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  தங்கள் துணைவியாரின் மறைவுக்கு இலங்கையில் உள்ள...

திருக்குறள் பயிலும் ஆஸ்திரேலியா குழந்தைகள் : திருக்குறள் கற்று தரும் தஞ்சை மாணவி தேவஸ்ரீ

தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி தம்பதியரின் மகள் தேவஸ்ரீ(14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக படித்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி தனது வீட்டில் தினந்தோறும் திருக்குறளை பலகையில்...

தாலிக்குத் தங்கம் திட்டம் : மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் வழங்கப்படமாட்டாது – தமிழக அரசு

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயன்பெற தகுதியானோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள...

கேராளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு : தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய...

கேராளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,803 பேருக்கு...

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு : மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சரமாரி கேள்வி

நாட்டில் 1991 போன்று 2021ல் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை இன்று மேலும்...

சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ்...

சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மற்றும் சட்டமுன்வடிவு ஒன்றை...

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு...

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் இருப்பவர் பிரகாஷ். இவருடைய 24 வயதான மகன் கருணாசாகர் உள்ளிட்ட...

தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை...

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரதிதாசன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது, பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.  இதற்காக அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக...

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் விவகாரம் தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், கடந்த மார்ச் 2000ம் ஆண்டு...

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை : பெருமிதத்தில்...

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியின் 7வது நாளான நேற்று இரண்டு தங்கம், 2 வெள்ளி,...

சாலையில் கிடந்த 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சாலையில் கிடந்த ரூ. 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பாபநாசத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர், நேற்று முன்தினம் பத்திரத்தை அடகு வைத்து பெற்ற ரூ 3 லட்சத்தி 50...

கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். வெளி மாநிலங்களில் தமிழ் பயில்வோருக்கு உதவித்...

வனத்துறையை கண்டித்து கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் பகுதியின் 15 ஆண்டுகால வறட்சிக்கு காரணமான வனத்துறை மற்றும் வனத்தோட்டக்கழகத்தின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து அரிமளம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு செய்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு டைமன்ட் கண்ணன் தலைமை தாங்கினார்....

9, 10, 11, 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ஆய்வு

9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அரசின் பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலுள்ள 91 அரசுப்பள்ளிகள், 27 மெட்ரிக் பள்ளிகள், 3...

சுங்கச்சாவடிகளில் கட்டணம் கொள்ளை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு சுங்கசாவடியிலிருந்து காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலுவலகம் வரை பொதுமக்கள் மத்தியில் பிச்சையெடுத்து நூதன முறையில் அதிக அளவில்...

விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாக திமுகவின் ஆட்சி

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ராம்நகரில்  உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாக திமுகவின் ஆட்சி  செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுவதாக...

புதுக்கோட்டையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

 புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் வடக்கு ராஜவீதிலுள்ளஆதிகாலத்து அலங்கார மாளிகையும்  இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கொரன விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை , புதுக்கோட்டை   மாவட்ட  காவல்துறை  கண்காணிப்பாளர்                              நிஷா பார்த்திபன்  பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அனைவருக்கும்...

அலட்சியமான அறுவைச் சிகிச்சையின்போது பெண் மரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மாதர் சங்கம் வலியுறுத்தல்

தவறான அறுவைச் சிகிச்சையால் பெண்ணனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி...

புதுக்கோட்டையில் நாளை முதல் பள்ளிகள் திறப்பின்போது மேற்கொள்ள வேண்டிய கோவிட் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு...

உச்சநீதிமன்றம் : 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்...

உச்சநீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்கும் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனுக்கு சீல்- அதிகாரிகள் அதிரடி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்த மருத்துவமனையில் பல்வேறு உணவகங்கள் உள்ளன, அவை...

5 வகுப்புகள் மட்டுமே ஒரு நாளைக்கு நடத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் நாளை 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி ஒன்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ்...

மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள்...

மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு கடந்த 24ஆம் தேதி ஆண் நண்பருடன் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்....

தமிழகத்தில் செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு : நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – தமிழக...

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின்...

டோக்கியோ பாராலிம்பிக் : பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று 26வது இடத்தில் உள்ளது இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று இந்தியா 26வது இடத்தில் உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியில் 7வது நாளான இன்று இரண்டு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை...

பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

 ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர்...

பழனி அருகே காவல்துறையை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு

பழனி அருகே, மஞ்சநாயக்கன்பட்டியில், காவல்துறையை கண்டித்து  செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள, மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் செல்போன் டவரின் மீது ஏறி காளிபட்டியை சேர்ந்த சதாசிவம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு...

ஆரணி அருகே மிட்டாய்களை சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதில் பரபரப்பு – போலீசார் தீவிர...

ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தரமற்ற (ரசாயனம் கலந்த) மிட்டாய்களை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணி தாலுகா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்திலுள்ள எம்ஜிஆர் நகர்...

ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பள்ளத்திவிடுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து(48). இவரது மகள் பாரதி பிரபா(19) ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள அவரது மாமா நடேசன் வீட்டில் கடந்த 20 நாட்களாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் பாரதி...

ஆலங்குடி கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் அருகே இளைஞர் கொலை – மாவட்ட எஸ்பி ஆய்வு

ஆலங்குடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த கோஷ்டி மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகையன் மகன் செல்லகணபதி (எ) விஜய். கடந்த சனிக்கிழமை இரவு கோஷ்டி மோதலால் கலிபுல்லா...

புதுக்கோட்டையில் மக்கள் நடமாட்டமிகுந்த இரண்டு இடங்களில் உள்ள மின்மாற்றிகளை உடன் மாற்றி அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்...

 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றி  ( டிரான்ஸ்பார்மர்  )  கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலம் தொடங்கவிருக்கிறது.கொஞ்சம் வேகமாக காற்றடித்தால்கூட சாய்ந்த விடக்கூடய அபாய நிலையில் இருக்கிறது. சிமென்ட் கரையெல்லாம் பெயர்ந்து வெறும் இரும்புக் கம்பியிலேயே நின்றுகொண்டருக்கிறது. ராணியார்மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  இது வழியாகத்தான் போகிறார்கள். ராஜகோபாலபுரம்...

செட்டிமாரம்பட்டியில் நந்திதேவா எருது இறப்பு : பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கோவிந்தன் என்கிற விவசாயி நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார். இந்த எருது கடந்த பல வருடங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெறும் எருது விடும் திருவிழாக்களில் பல முறை முதல் பரிசை தட்டிச்சென்று...

வடமாநிலத்திலிருந்து குட்கா கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் கூடங்களாக மாறிவரும் சுங்கச்சாவடிகளை படிபடிப்யாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  கோவை, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அளவிலான  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சேலத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது...

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை - திருச்சி சாலையில் ரூபாய் 58 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்புராயன்...

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி தொடர்ந்து 6வது நாளாக அன்னதானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக அன்று முதல்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனைத்து ஒன்றியங்களில் உள்ள பேரூர் கழகங்கள் மற்றும் கிளைக் கழகங்கள் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்...

தியாகதுருகம் புறவழிச் சாலையில் கோர விபத்து – சுற்றுலா சென்று வீடு திரும்பிய சிறுவன் உட்பட 6 பேர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர் இமான் வயது 38, இவரது தாயார் மற்றும் 14 வயது சிறுவன் உள்பட...

எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் 2021-2024ம் ஆண்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் சபீக் அஹமது மற்றும் புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட தலைவர் சையது அகமது ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். கட்சியின் மாவட்ட...

மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் துபாய் பயணம்

மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்திற்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில்...

சாமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த பட்டய கணக்கர் கொலை செய்து புதைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கோள்ளப்பட்டி மாந்தோப்பில் பணப்பிரச்சனை காரணமாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் (ஆடிட்டர்) கொலை செய்து புதைப்பு, சாமல்பட்டி போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோள்ளப்பட்டி கிராமத்தில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜனா ரஞ்சன் பிரதான்(48).பட்டய கணக்கர்...

வலைதளங்களில் குழந்தைகள் வன்முறை வீடியோவை வெளியிடாதீர் என குழந்தைகள் நல செயற்பாட்டாளர் கோரிக்கை

குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த தாய் துளசி, ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ஒன்றும் அறியாத ஒன்றரை வயதே ஆன பிஞ்சு குழந்தையை விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசி இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி...

பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7...

நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நான் நடிகனாக மட்டும்தான் உள்ளேன் – சரத்குமார் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் வருகை புரிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போது தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்...

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் – பிரதமர் மோடி புகழாரம்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மக்களிடம் பேசுவது வழக்கம். இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையான...

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற...

ஆலங்குடியில் குடிபோதையால் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் : அரிவாளால் வெட்டியதில் இளைஞர் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குடிபோதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்லகணபதி என்கிற விஜய்(21). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் நேற்று இரவு குடிபோதையில் இளைஞர்களுக்குள்...

காந்தி மார்க்கெட் பகுதியில் 40 ஆயிரம் கிலோ தரமற்ற அரிசி மூட்டைகள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை...

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் நடத்தி வரும் நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரை வைத்து திருச்சி மாவட்டத்தில் போலியாக சாக்கு மூட்டைகள் தயாரித்து அதில் தரமற்ற அரிசி...

மதுரை : கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான...

மதுரையில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்...

மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு 17,000 ரூபாய் மதிப்பில் சுயதொழில் ஏற்படுத்தி கொடுத்த திருமயம் பாரத மிகுமின் நிறுவன ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மூலமாக இயங்கக்கூடிய பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் மூலமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதன்...

நாமக்கல் : மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ...

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில், தோட்டதக்காரத் தெருவில் தங்கப்பாண்டியன் என்பவருடைய மகன், மகள் இருவரும் தசைநார் சிதைவு நோயால்...

ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதுதல்

ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே, விளந்தை அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சிவனடியார்கள் தொண்டு மன்ற நிர்வாகிகள் பலர் முன்னின்று நடத்திய இந்த, திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில், சிவனடியார்களுக்கு, அரியலூர் மாவட்ட செங்குந்தர்...

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தை சார்ந்த அதிமுக பிரமுகர்களான, உஞ்சினி ஊராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் பெ.கண்ணன், உஞ்சினி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சிவாஜி ராஜு, ச.வாசன்கீர்த்தி ஆகியோர் திமுக...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் – கமல்ஹாசன் வலியுறுத்தல்

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு...

கொரோனா பரவல் எதிரொலி : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க வேண்டும் :...

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்களின்றி இன்று தொடங்கவுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க பேராலய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருடாவருடம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால்,...

புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்க கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக குமரமலை வைரவமூர்த்தி, செயலாளராக குன்றாண்டார்  கோயில் குமாரசாமி, பொருளாளராக திருக்கட்டளை ராஜா, அமைப்பு செயலாளர் நமணசமுத்திரம் வினோத், கொள்கை பரப்பு செயலாளராக திருப்புனவாசல் வேதாரண்யேஸ்வரர், கௌரவத் தலைவராக புதுக்கோட்டை...

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்- கலெக்டர் தகவல்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 1ம் தேதி புதன்கிழமை முதல் நடைபெறஉள்ளது. நேரடி பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை...

போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்...

போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:- போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை...

தலித் சமூதாயத்தினர் அமைத்த குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன் மணி வளவன் கலைவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை...

12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக...

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன்  அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார் விரகனூர் வேலம்மாள் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கிர்த்திஷ் மதுரை கோசாகுளத்தில் நடந்த...

கர்நாடகா : இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது – ஒருவருக்கு போலீசார்...

கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு இயற்கை...

திண்டுக்கல்லில் இறைச்சிக்காக ஆடுவதை செய்தால் அபராதம் மாநகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் இறைச்சிக்காக ஆடு வதை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியன், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஆடுகளை நவீன ஆட்டிறைச்சி...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் : போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் –...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் முக.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை...

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.61 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 44.97 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.61 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.97 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,61,56,428 பேர்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,759 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை அரசு விதை உற்பத்தியாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சி

வித்தே விளைச்சலுக்கு ஆதாரம் என்ற முதுமொழிக்கு ஏற்ப தரமான சான்று விதைகளை வழங்கியும் விதைத்தரத்தினை உறுதி செய்தும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை செயல்பட்டு வருகிறது. வேளாண் துறை முலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விதைச்சான்றுத் துறையால் சான்றளிப்பு செய்யப்பட்டு வட்டார வேளாண் விரிவாக்க...

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.  முகாம் லாரி மார்கெட்டில் நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்க தலைவர் ஆர்.எம் .துரைமணி தலைமையேற்று நடத்தினார்.  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம் சாலை பாதுகாப்பு குறித்த...

விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி நடத்துவோம் என்று இந்து...

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.தற்போது கொரோனா குறைந்துள்ளது. பல மதங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் படு...

50% பேருக்கு முதல் தடுப்பூசி நிறைவு – மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியை...

வணிகரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த வழக்கு – தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் கைது

நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வணிகரிடம் 10 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை தேனி...

ரூ.50 லட்சம் அபராதம்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய மறுத்த மாணவர்கள்

 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுக்கும் மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறை சார்ந்த காலி பணியிடங்கள் இருந்தும் தமிழ்நாட்டில்...

இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல், விரைந்து நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு காமராஜர் நகர் பகுதியில் 1929 இல் மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலஆண்டுகளாக இருக்கும் இம்மயானத்தில் தற்போது மண்ணின் தன்மை கெட்டு விட்டதாகவும், அருகில் குளம் இருப்பதால் புதைப்பதற்கு குழிதோண்டினால் தண்ணீர் வந்துவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால்  இஸ்லாமியர்களின்...

9,10,11,12 – ம் வகுப்புகளுக்கு வருகிற 1ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு. அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும்...

வருகிற 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி  புதுக்கோட்டை, இலுப்பூர் கல்வி மாவட்டங்களைச்சேர்ந்த உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான  முன்னேற்பாடு  கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக தேர்வுக்கூட அரங்கில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்து...

பழனி அருகே பொருந்தலாறு நியாயவிலை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அலகழிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பொருந்தலாறு டேம் பகுதியில்,500  குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர், இங்கு வசித்து வருபவர்கள், மீன் பிடித்தல்,  மற்றும்,கூலி தொழில் செய்து வருகின்றனர், இந்நிலையில் பொருந்தலாறு நியாய விலைகடையில் ரேசன் பொருட்கள் வாங்க வருபவர்களை, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருதகாளியம்மன் கோவில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டமசோதா தாக்கல்: முதலமைச்சர் ஸ்டாலின்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில்...

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் : டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன....

ஆலங்குடி அருகே வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர் கல்வி கனவு நனவாகுமா?

ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர்க ல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டி யைச் சேர்ந்தவர் தங்கராஜ் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி இந்த தம்பதியரின்...

கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன் இவர்...

பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் : ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது- முதல்வர் ஸ்டாலின்

பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படவுள்ளதாக, ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் பெயரில்...

செப் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு : தமிழக அரசு உத்தரவு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 முதல் 12.30-க்குள் சத்துணவு தரவேண்டும். காலாவதியான மற்றும் தரமற்ற...

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்துள்ள ராமாநாதபுரம் கிராமத்தில், லட்சுமி - வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விறகு வெட்டியவர்கள், அங்கு 2 பீரங்கி குண்டுகள் இருப்பதை கண்டு பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல்...

நடுக்கடலில் அதிகாரிகளை சிறைபிடித்த புதுவை மீனவர்கள்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்த படகை பறிமுதல் செய்ய முயற்சித்த மீன்வளத்துறை மற்றும் காவல் படையினரும் சென்ற படகை புதுவை மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடித்தனர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என தடை உள்ளது. அதுமட்டுமில்லாமல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில்...

அறந்தாங்கி வட்டார மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு செல்லப்பட்டது. இப்பயிற்சிக்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை...

பள்ளிகள் திறப்பு : பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் வருகின்ற  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டும்  வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்,...

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல் – உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள்...

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சாட்சி ரவி தொடர்ந்த வழக்கின் மீது ஆக.27ல் தீர்ப்பு – சென்னை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியான ரவி என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆக.27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், இதனால், இந்த...

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர்...

கறம்பக்குடி பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிற்கிணங்க  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படி, கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்ட...

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படிரூபவ், நடப்பு...

தமிழக அரசின் அலட்சியப் போக்கால், 2,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசிடம் மானிய நிலுவைத் தொகை தேங்கியுள்ளது...

வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் நெல் சீசனில் நெல் கொள்முதலை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியை பல ஆண்டுகளாகச் செய்துவந்த தமிழ்...

பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் : முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம்

பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- ஆசிரியர் மற்றும் அரசு...

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் விலகல்

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று இன்று காலை வெளியான நிலையில் அவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில்...

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதுவரை நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை...

கொரோனா 3வது அலை : குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை – மருத்துவர் திரேன்...

கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை....

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு : கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் –...

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதன்படி, பள்ளிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,467 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சசிகலா, இபிஎஸ் உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஐகோர்ட்டில் மனு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, இபிஎஸ், சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த கொடநாடு வீட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி...

ஆப்கானிஸ்தான் விவகாரம் : அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க ஆக.26ல் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிற நாட்டினர் அங்கு வசிக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை...

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் புனித தீர்த்தங்களில் நீராட தடை நீட்டிப்பு

வார விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் இன்று காலை முதல் தடை நீக்கபட்டதால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருக்கோயில் வளாகத்தில் உள்ள...

சென்னை : உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை –...

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்தியநாராயணன்(26), சூரியநாராயணன்(24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. ஆனால் அண்ணன் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சத்யநாராயணன் திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கிக் கொண்டு வடபழனியில் உள்ள சங்கர மடத்தின்...

நாமக்கல்லில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

நாமக்கல் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் மூலம் நாமக்கல்லில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை தற்போதைய அரசு தர கட்டுப்பாடு செய்ய வேண்டும் என நாமக்கல் நகர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் கொரோனா ஊரடங்கிலும்...

டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகள் : 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும்...

மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்று கொண்டார். மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து கடந்த...

நாமக்கல் அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நாமக்கல் எம்.எல்.ஏ பங்கேற்றார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் சாலையில் (கழிவுநீர்) சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல்...

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம் – இன்று முதல் தமிழகம் முழுவதும் துவக்கம்

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டமானது இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வு...

தமிழகம் : ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் – இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அத்துடன் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல்...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியது : பலி எண்ணிக்கை 44.44 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.44 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,25,83,644 பேர்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,072 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்...

காபூலில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமானம் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து நாடு த