Home Blog
ஆப்கானில் அந்நியச் செலாவணியை தங்களது தேவைக்காக பயன்படுத்த தடை விதிப்பதாகவும், மீறினால் வழக்கு தொடரப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், தற்காலிக அரசை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். உலக நாடுகளின் பொருளாதார உதவியால் சீரடைந்து வந்த ஆப்கான், தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆப்கானிய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் நாட்டின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிய வங்கிகள் கடுமையான பணநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன....
உளுந்தூர்பேட்டை அருகே போலியான பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும் 1,134 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்து அதிக அளவில் மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்  உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உளுந்தூர்பேட்டை...
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வானதன் மூலம் அதிமுக சார்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து  இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம்...
கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக ரூ.51 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளிட்ட அறிவிப்பில், சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில்...
இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வழியே பேசினார். அப்போது அவர் கூறுகையில், இமாசல பிரதேசம் சாம்பியன் ஆக உருவெடுத்து உள்ளது. இமாசல பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை...
கொரோனா 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்த குழு செயல்முறை எதையும் மத்திய அரசுக்கு அளிக்காத நிலையில் 3வது டோஸ் பூஸ்டர் இந்திய அளவில் எங்கும் தொடங்கவில்லை. கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால், கேரள-தமிழக எல்லையோர மாவட்டங்களில் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முதல்வர்...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர  5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர்த்தல் மற்றும் கல்வி மேலாண்மை தளத்தில் மாணவர்களின் வருகைப்பதிவு, சேர்க்கம், நீக்கல் போன்றவற்றை...
பால் உற்பத்தியாளர்களிடம் நெய் வாங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்த கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் அதன் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தழிழக முதல்வர், விவசாயம் பால்வளம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டில் விவசாயிகளோடு ஒன்றிணைந்த தொழிலாக கறவை மாடுகள் வளர்ப்பது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளின் மூலம் கிடைக்கும்...
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியால் கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட கலெக்டர் சமீரண் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக - கேரளா  எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கோவை - கேரளாவில் எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாளையாறு சோதனைச் சாவடியில்...
கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்தவர் மதியரசன்(27). இவருக்கு திருமணமாகி 45 நாட்களே ஆகிறது. மதியரசன் அவருடைய சகோதரி மகன் ஆசாத்(12) இருவரும் கறம்பக்குடி அருகேயுள்ள வேம்பம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிலாவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே தட்டாவூரணியை சேர்ந்த சங்கர்(45) என்பவா் கறம்பக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மதியரசன் மற்றும் சங்கர் ஆகியோரின் இருசக்கர...
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அகில இந்திய கட்டுனர் சங்கம் தஞ்சை மைய கட்டடத்தில் தமிழ் மாநில நெடுஞ்சாலை குழு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் குழு சார்பில் தலைவர் எம்.அய்யப்பன் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அகில இந்திய கட்டுனர் சங்க தமிழ் மாநில நெடுஞ்சாலை குழுத்தலைவர் எம்.அய்யப்பன் கூறியதாவது:- தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்குவாரிகள் கிடையாது. அதனால் வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரும்போது கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு இடர்பாடுகள் உள்ளன. இதை தமிழக அரசு...
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ். இவர் பூம்புகார் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அண்மையில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் பவுன்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலின்போது பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எடக்குடி கிராமத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) என்பவரிடம் பவுன்ராஜ் பணம்...
புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பும் ரோட்டரி சங்கங்களும் இணைந்து இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன்வந்துள்ளனர். ஆக்ட் கிரான்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை கிங்டவுன் மற்றும் கிரவுன் சிட்டி  ரோட்டரி...
பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பில் கூறியதாவது:- இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். 95 வயது வரை போராடியவர் பெரியார். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது....
மதுரையில் வாகன சோதனையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், மக்கள் அனைவரும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில், இன்று...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.81 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22,15,18,424 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,81,274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,80,06,820 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,493 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
பழனி முருகன் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் (சரவணப்பொய்கை) தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்க இலவசம் என தமிழக அரசு அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக்குட்பட்ட (சரவண பொய்கை) முடி எடுக்குகும் ஊழியர்கள் இலவசமாக மொட்டை அடிப்பதால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லையென்றும், இதற்கு முறையாக தேவஸ்தானம் மாத சம்பளம் வழங்க...
டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சங்கம் விகார் பகுதியில் கூட்டுகுடும்பத்துடன் வசித்து வந்த 21 வயதான இளம் காவல்துறை அதிகாரி நான்கு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புதுறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாத்தால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை என்பதனால் அவரது அவர்கள் காவல் நிலையத்தில்...
டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக.24ம் தேதி துவங்கியது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் இறுதிநாளான இன்று கலைநிகழ்ச்சிகளுடன் போட்டிகள் நிறைவுபெற்றன. நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தேசிய கொடியை ஏந்தி சென்றார். இதனையடுத்து நடப்பு பாராலிம்பிக்கில் 5...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இணை கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பக்த சபாக்கள் மற்றும் திமுக நகர பிரமுகர் டி.டி.சரவணன் உட்பட பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது நாமக்கல் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணி, மோகனூர் அருள்மிகு காந்த மலை முருகன் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணி, நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் திருத்தேர் புதுப்பிக்கும்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண  மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 63 மீனவ கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி மீனவ பிரதிநிதிகள் தலைமையில் நாகை அக்கறைபேட்டை கிராம நிர்வாகிகள்  முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி மீனவ கிராம நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் சுருக்கு...
நாமக்கல் அருகே பொதுமக்கள் சார்பில் ஏரிக்கரையில் பனை விதை விதைக்கும் பணி இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஏரிக்கரையில் நேற்று சின்னகரசப்பாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர் மன்றத்தார் இணைந்து சுமார் 2000 பனை விதைகள் விதைத்தனர். இப்பணிக்கு விவசாய அமைப்பினரும் உறுதுணையாக இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து இரண்டு பேருந்து வழித்தடங்களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை இன்று தொடங்கி வைத்தார். கறம்பக்குடியிலிருந்து பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி வழியாக பட்டுக்கோட்டைக்கும், கறம்பக்குடியிலிருந்து அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, கறம்பவிடுதி, மணமடை, கிளாங்காடு, முதலிப்பட்டி வழியாக தஞ்சாவூருக்கும் பேருந்துவசதி வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட எம்.சின்னத்துரை தான் வெற்றிபெற்றால் மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் மேற்படி இரண்டு வழித்தடங்களிலும் இன்று...
கவிராசன் அறக்கட்டளை நடத்திய "நட்சத்திர ஆசிரியர்" விருதுகள் வழங்கும் விழா மற்றும் "புதுமைப் புதையல்" நூல் வெளியீட்டு விழா, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரங்கத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற தேசிய நல்லாசிரியர் விருதாளர், தங்கம் மூர்த்தி, சிறந்த ஆசிரியர்களுக்கு, "நட்சத்திர ஆசிரியர்"  விருதுகளை வழங்கி, "புதுமைப் புதையல்" நூலை வெளிட்டு, தொடக்க உரை ஆற்றினார். இணையம் மூலம், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் வள்ளிநாயகம், கவிராசன் அறக்கட்டளையைப் பாராட்டி, ஆசிரியர்களின் பெருமை போற்றி, வெளியிட்ட நூலில் இருந்து...
புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு விரைவாக கோவிட் 19 தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஏற்கனவே புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் காமராஜபுரம், கோவில்பட்டி மற்றும் நகர்மன்ற கட்டிடத்தில் தினசரி தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் கூடுதலாக நான்கு இடங்களில் நிலையான தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5...
காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல மாதங்களாக ஏடிஎம் வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏடிஎம் வாசலில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த வாலிபரை சுற்றி வளைத்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவன் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சின்னவளையம் கிராமத்தைசேர்ந்த ஜோதி பாசு வயது...
பஞ்சு மீதான 1% வரி நீக்கத்தால் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நாட்டில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 110 முதல் 120 லட்சம் பேல் பருத்தி பஞ்சு தேவையில், சுமார் 5 முதல் 6 லட்சம் பருத்திப் பஞ்சு பேல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் சுமார் 95% பஞ்சை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2 முதல் 6 வரை வாடகை...
ஆசிரியர் தினத்தையொட்டி இணையம் வழியாக ஆசிரியர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வாழ்த்து கூறினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும், கவிதை சொல்லியும், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை பேசியும் அசத்தினர். தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம், கவிதை சொல்லுதல், பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை...
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை சங்க தலைவர் துரை மணி தலைமை தாங்கினார். தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்எஸ் காசிநாதன் அனைவரையும்  வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  நகராட்சி ஆணையர்  நாகராஜன் அவருடைய பள்ளி பருவ ஆசிரியர்  சியாமளா பத்மநாபன் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், புலவர் சந்திரசேகரன், பார்வதி, ராம்தாஸ், அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, பரமசிவம் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதினையும் நற்சான்றிதழையும் வழங்கி...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.74 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22,10,76,015 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,74,435 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,75,65,274 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,629 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,766 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,29,88,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 308 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,40,533 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு கூறியதாவது:- பலங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஜமீன்தார்கள் மற்றும் பண வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களை கோவில்களுக்கு தானமாக வழங்கினர். தானமாக வழங்கிய கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆகையால்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கணக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தங்கம் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த நிலையில் பழனிச்சாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இரத்த காயங்களுடன் காணப்பட்ட பழனிச்சாமி...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில் உள்ள அரசு சார்நிலை கருவூல அலுவலகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவர் ஊதா நிற கைலியும், ஆரஞ்சு நிற சட்டையும்...
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(40). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இந்நிலையில் நேற்று ராஜேஷ்குமார் தனது தாயாருடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பம்பட்டில் உள்ள பள்ளியில் உறவினர் குழந்தையை விட்டு வர சென்றனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த...
நாமக்கல்லில் மூளைச்சாவால் உயிரிழந்த திமுக பிரமுகர் மகனின் 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு நன்றி நவிழும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு நகரத்தின் பொறுப்பு குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி மகன் கி.அஜித்குமார் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மறைவு எய்தியதையொட்டி அவரது உடல் உறுப்புக்களான கண், இதயம், கிட்னி, கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட 8 உடல் உறுப்புக்கள் தானம் செய்யபட்டது. அஜீத்குமார் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகள் மூலம் பலரை வாழவைத்து கொண்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து...
மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெறும் இலவச பதிவு முகாம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்த இம்முகாம் மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதனை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் முதல்...
தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொய்வின்றித் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை இன்று பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழனின் வரலாறும் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆதிச்சநல்லூர், அரிகக்மேடு போன்ற அகழாய்வைத் தொடர்ந்து தற்பொழுது கீழடி முக்கிய சான்றாகத் திகழ்கிறது. சித்தன்னவாசல், குடுமியான்மலை, கலசமங்கலம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான தொல்லியல் நினைவுச்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மஜக மாவட்டசெயலாளா் முகமது ஜான் விடுத்துள்ள கோரிகையில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது அவசர மற்றும் புறநோயாளிகள் அதிகளவில் வருவகின்றனா். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவர்களால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நோயாளிகளின் நலன்கருதி உடனடியாக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து விபத்து, அவசர சிகிச்சை,...
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கடந்த 1ம் தேதி (புதன்கிழமை) முதல் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலோடு வருவாய்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை ஆகியோரின் ஒத்துழைப்போடு அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில்  பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும்...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சங்கீதா தம்பதியின் 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கும் நலன்ராஜன்  உலக சாதனைக்காகவும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காகவும் சாலையில் 1 மணி நேரத்தில் 18.4 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தார். மாணவர் நலன்ராஜன் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு புறவழி சாலையிலிருந்து தனது ஸ்கேட்டிங்கை துவக்கினார். முதலில் மாணவர் நலன்ராஜனை மருத்துவர் சதாசிவம் பரிசோதித்தார். பின்னர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் ஸ்கேட்டிங்கை கொடியசைத்து துவக்கி வைத்தார். அணைக்காடு...
அறந்தாங்கி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு மின்னனு மூலமாக வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் செய்தல் பற்றிய விவசாயிகள் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு செல்லப்பட்டது. இப்பயணத்திற்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை வேளாண்மை உதவி இயக்குநர் சி.பாஸ்கரன் தலைமை வகித்து இப்பயணத்தை துவக்கி வைத்தார். பிறகு பெருந்துறையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு...
கிருஷ்ணகிரியில் பெய்துவரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி பழைய பேட்டை 12வது வார்டில் உள்ள நல்லதம்பி செட்டி தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முறையாக இணைப்பு வழங்காததால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். மேலும் மழை அதிகமாக உள்ள நேரங்களில் மழை நீருடன்...
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி நிர்மலா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பயனித்த மனைவி நிர்மலா...
திருவாரூர் கடைவீதியில் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் கிரண்குமார்(42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு நகை வாங்குவதுபோல் பர்தா அணிந்து 35 வயது பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர், ஒரு பவுன் அளவில் செயின் வேண்டுமென கிரண்குமாரிடம் கேட்டார். இதனால் ஒரு பவுன் செயின்களை எடுத்து கிரண்குமார் காண்பித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம...
திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள் காசிமேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து காசிமேடு...
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் செப்டம்பர் 2021 மாதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர சிறப்பு அரும்பொருள் (புதிய கற்கால கைக்கோடரி) பற்றிய குறிப்புகள். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் செப்டம்பர், 2021 மாதத்தில் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (புதிய கற்கால கைக்கோடரி) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன கற்காலம், புதிய கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வரலாற்றுக்கு முற்பட்ட கால...
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் செல்வநாயகம் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்க...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,618 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 330 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் 'முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டார். அதன்படி, ஒலிம்பிக் அகாடமிகள் மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்திறன் வாய்ந்த விளையாட்டு...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்பு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் இலுப்பூர்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோதும் வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தேன். ஆனால் அப்புகாரின்மீது லஞ்சஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார். இதனத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், இரு...
கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் வயது 22. பி.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ் இறுதியாண்டு மாணவரான பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை முடித்து காரைக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது அவர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகேசன் மகன் செல்லகணபதி (எ) விஜய்(21). இவருக்கும் மற்றுமொரு தரப்பினருடன் ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் கோஷ்டி மோதலாக இரவு நடந்துள்ளது. இதைதொடர்ந்து கலிபுல்லா நகர் பிள்ளையார்கோவில் அருகில் சென்ற விஜய்யை எதிர் தரப்பு கோஷ்டியினர் அரிவாளால் ஓடஓட விரட்டிச்சென்று வெட்டி கீழே விழுந்த விஜய் சம்பவ இடத்திலயே இறந்து விட்டார். இச்சம்பவம்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,352 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,29,03,289 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 366 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அப்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. இதனால் மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பிய பல கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் திரும்பி அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...
தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன.1ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து...
மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அடியெடித்து வைக்கும்போது டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் முஸ்லிம்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த மாநிலம் திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒருசேர கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தப்லீக்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய செல்போன் டவரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமகிரிபேட்டை ஒன்றியம் பெரப்பன்ஞ்சோலை ஊராட்சி பள்ளிப்பாறையில் தொலைபேசி சிக்னல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான ஆண்லைன் வகுப்புகளை பயில்வதற்கு இணையதள வசதி கிடைக்காத காரணத்தால் மாணவ மாணவிகள் உயரமான பகுதிக்கு சென்றும், மரத்தின் மீது ஏரியும் ஆன்லைன் வகுப்புகளை பயின்று வந்தனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று சம்பந்தபட்ட இடத்திற்கு...
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு தரைதளத்தில், அவசர அறுவை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையத்தினை கல்லூரி முதல்வர் மு.பூவதி இன்று திறந்து வைத்தார். இங்கு நோய் முற்றிய நிலையில் உள்ள பக்கவாதம், புற்றுநோய் மற்றும் HIV போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தணிப்பு மற்றும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும். இவ்விழாவில் துணை முதல்வர் கலையரசி, நிலைய முதல்வர் இந்திராணி, மயக்கவியல் இணை பேராசிரியர்கள் மற்றும் துறை இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள்...
வெளிநாடுகளில் மருத்துவ படிக்கும் தமிழக மாணவர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று பயில முடியாத நிலையில் அவர்களுக்கு இணைய வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது:- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் (கொரோனா தாக்கத்தின் காரணமாக) தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர். ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து பயின்றுவருகின்றனர். ஆனால்...
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் மயிலாடுதுறையில் பல லட்சம் மதிப்பிலான மண் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் மா.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும் ஊர்வலம் செல்லவும் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது. விநாயகர்...
உளுந்தூர்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன் தலைமையில், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, தனிப் பிரிவு காவலர்கள் தன்ராஜ், அழகு செந்தில் மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட குழு உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள...
உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் டெங்கு காய்ச்சலால் ஒரே வாரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், அதை டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து,...
தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தொடர்ந்து இன்றும் 3வது நாளாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து...
இந்தியாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தலைமையிடத்தில் அதன் உறுப்பினர்களுக்கு மக்கள் பணியாற்ற மத்திய அரசு அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் பாரத பிரதமர், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 25 முதல் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்‌. ஆனால் அவர்களுக்கென்று அவர்களுடைய தொகுதியில் தனி அலுவலகம் இருப்பதாக இதுவரை...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணக்குன்னம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழிகாட்டலில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில்  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் வருவாய் பேரிடர்...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 45.45 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,92,64,009 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,45,103 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,60,40,397 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,863 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,092 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 509 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,39,529 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருகினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமியின் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  தங்கள் துணைவியாரின் மறைவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக பிரார்த்தனை மேற்கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் இருந்து...
தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி தம்பதியரின் மகள் தேவஸ்ரீ(14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக படித்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி தனது வீட்டில் தினந்தோறும் திருக்குறளை பலகையில் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இதனையடுத்து பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் தேவஸ்ரீ பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த செய்தியினை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளும் திருக்குறள் பயிலுவதற்கு தேவஸ்ரீயை தொடர்பு கொண்டுள்ளனர்....
தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயன்பெற தகுதியானோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. அதேப்போன்று மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா...
கேராளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,38,614ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை...
நாட்டில் 1991 போன்று 2021ல் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர்...
சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மற்றும் சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை இணைப்பதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை ஒருங்கிணைந்த வகையில் இருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றுவதற்கும் மற்றும் 2013ம் ஆண்டு...
ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் இருப்பவர் பிரகாஷ். இவருடைய 24 வயதான மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு ஓசூருக்குக் காரில் திரும்பியுள்ளனர். சுமார் 2 மணியளவில் கார் பெங்களூரு கோரமங்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் காரில்...
தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து...
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரதிதாசன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது, பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.  இதற்காக அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் மேற்கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை நீக்கம் செய்வதற்கான சட்ட முன்வடிவை  சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல்...
 சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், கடந்த மார்ச் 2000ம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டதாகவும், இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை மறுஆய்வு செய்யவும், மீன்வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு தொழில்நுட்ப கொள்கையை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2014ம் ஆண்டு இந்த குழு...
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியின் 7வது நாளான நேற்று இரண்டு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர். இதனைத்தொடர்ந்து போட்டியின் 8வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன....
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சாலையில் கிடந்த ரூ. 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பாபநாசத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர், நேற்று முன்தினம் பத்திரத்தை அடகு வைத்து பெற்ற ரூ 3 லட்சத்தி 50 ஆயிரம் பணத்தை, தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார் அப்போது திருப்பாலத்துறை அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் கீழே விழுந்துவிட்டது அதை கவனிக்காமல் சூர்யா சென்றுவிட்டார். இந்நிலையில், பின்னால் வாகனத்தில் வந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். வெளி மாநிலங்களில் தமிழ் பயில்வோருக்கு உதவித் தொகை தரப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இவற்றுடன், ‘பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் அதில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை தரப்படும். தமிழ் அறிஞர்களின்...
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் பகுதியின் 15 ஆண்டுகால வறட்சிக்கு காரணமான வனத்துறை மற்றும் வனத்தோட்டக்கழகத்தின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து அரிமளம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு செய்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு டைமன்ட் கண்ணன் தலைமை தாங்கினார். குமார் முன்னிலை வகித்தார். இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைகளை அகற்றி மழைநீர் தேங்கு குழிகளை இயற்கை மழைநீர் வழித்தடத்துடன் இணைக்க வேண்டும், அரிமளத்தை ஒட்டிய வனப்பகுதியில் நடைபெற்றுவரும் உழவுப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், அரிமளம்...
9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அரசின் பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலுள்ள 91 அரசுப்பள்ளிகள், 27 மெட்ரிக் பள்ளிகள், 3 சி.பி.எஸ்.சி பள்ளிகள் என அனைத்தும் பின்பற்றகின்றனவா என ஆய்வு செய்து, தலைமை ஆசிரியர்களிடமும், ஆசிரியர்களிடமும் பள்ளி திறப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்டக்கல்வி அலுவலர் பள்ளி வளாகம், வகுப்பறைகள்,...
சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு சுங்கசாவடியிலிருந்து காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலுவலகம் வரை பொதுமக்கள் மத்தியில் பிச்சையெடுத்து நூதன முறையில் அதிக அளவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையத்திற்கு எதிராக மனு கொடுக்கப் போகிறோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில்...
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ராம்நகரில்  உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாக திமுகவின் ஆட்சி  செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறிய அவர், பக்ரீத் பண்டிகையின் போது ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்துக்களை  திமுக அரசாங்கம் தொடர்ந்து  புறக்கணித்து வருவதாக தெரிவித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்,  கிறிஸ்தவர்களின் பண்டிகையும் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது...
 புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் வடக்கு ராஜவீதிலுள்ளஆதிகாலத்து அலங்கார மாளிகையும்  இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கொரன விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை , புதுக்கோட்டை   மாவட்ட  காவல்துறை  கண்காணிப்பாளர்                              நிஷா பார்த்திபன்  பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அனைவருக்கும் வழங்கி கலை நிகழ்ச்சியினை  தொடங்கி வைத்தார் .  கலைக்குழுவினர்   தங்களது பிரச்சாரத்தில்  ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை  இயக்க வேண்டும். அனைவரும் தற்போது உள்ள காலகட்டத்தில் முக கவசம் அணிந்து மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். சாலைகளில்...
தவறான அறுவைச் சிகிச்சையால் பெண்ணனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி ராணி வயது 28. ராணி புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் பிறந்தவர்.  இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் பிறந்து இரணடாவதாக ஆண்குழந்தை பிறந்ததால்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள்...
உச்சநீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்கும் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்த மருத்துவமனையில் பல்வேறு உணவகங்கள் உள்ளன, அவை தனியாரிடம் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டு இயங்கி வருகின்றன,இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கிவரும் உணவகத்தில் கடந்த சில மாதங்களாக நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு...
  பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் நாளை 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி ஒன்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ''நாளை முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளி இயங்கும். ஒவ்வொரு மேஜையிலும் தலா இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர்.  பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை....
மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு கடந்த 24ஆம் தேதி ஆண் நண்பருடன் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மைசூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மேலும் இருவரை...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தொற்றின் உயர்வு, நோய்த்தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக...
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று இந்தியா 26வது இடத்தில் உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியில் 7வது நாளான இன்று இரண்டு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ராஜஸ்தானின் ஜெய்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை அவனி லெகாரா(19) அதிரடியாக விளையாடி...
 ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வயது 19 அதிரடியாக விளையாடி  தங்கம் வென்றுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த இவர் போட்டியில் எஸ்எச் பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று உலக...
பழனி அருகே, மஞ்சநாயக்கன்பட்டியில், காவல்துறையை கண்டித்து  செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள, மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் செல்போன் டவரின் மீது ஏறி காளிபட்டியை சேர்ந்த சதாசிவம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற திமுக துணை தலைவர் மோகனபிரபு, திமுக கவுன்சிலர் பொன்னுத்தாய் மகன் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மண் அள்ளுவதாகவும், கடந்த சனிக்கிழமை அன்று தனது மகன் கலைகௌதம்...
ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தரமற்ற (ரசாயனம் கலந்த) மிட்டாய்களை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணி தாலுகா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்திலுள்ள எம்ஜிஆர் நகர் காந்தி தெருவில் வசித்து வருபவர்கள் புருஷோத்தமன்- ரமணி தம்பதியினர். இவர்களுக்கு யுவராஜ் (9) என்ற ஒரு மகன் உள்ளார். இதே போன்று புருஷோத்தமன் வீட்டின் மாடியில் இவரது சகோதரரான ஹரிராம்-ரேவதி தம்பதியினரும் வசித்து வருகின்றனர்....
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பள்ளத்திவிடுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து(48). இவரது மகள் பாரதி பிரபா(19) ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள அவரது மாமா நடேசன் வீட்டில் கடந்த 20 நாட்களாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் பாரதி பிரபாவை, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாரதி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு...
ஆலங்குடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த கோஷ்டி மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகையன் மகன் செல்லகணபதி (எ) விஜய். கடந்த சனிக்கிழமை இரவு கோஷ்டி மோதலால் கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் அருகில் அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத்தொடர்ந்து வெட்டிய கும்பல் தப்பிவிட்டனர். இச்சம்பவம் ஆலங்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட...
 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றி  ( டிரான்ஸ்பார்மர்  )  கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலம் தொடங்கவிருக்கிறது.கொஞ்சம் வேகமாக காற்றடித்தால்கூட சாய்ந்த விடக்கூடய அபாய நிலையில் இருக்கிறது. சிமென்ட் கரையெல்லாம் பெயர்ந்து வெறும் இரும்புக் கம்பியிலேயே நின்றுகொண்டருக்கிறது. ராணியார்மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  இது வழியாகத்தான் போகிறார்கள். ராஜகோபாலபுரம் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் இந்த இடத்தைக் கடந்துதான் செல்லவேண்டும்.   மக்கள் நலன் கருதி இந்த மின்மாற்றி கம்பங்களை மின்சார வாரியம் உடன் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். இதே போல மகளிர் கல்லூரிக்கு போகும்...
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கோவிந்தன் என்கிற விவசாயி நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார். இந்த எருது கடந்த பல வருடங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெறும் எருது விடும் திருவிழாக்களில் பல முறை முதல் பரிசை தட்டிச்சென்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், செட்டிமாரம்பட்டி கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென "நந்தி தேவா"  எருது அசைபோட முடியாமல் அவதிப்பட்டுள்ளது. இதனையெட்டி கால்நடை மருத்துவர் வேடியப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் வேடியப்பன் நந்திதேவா...
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் கூடங்களாக மாறிவரும் சுங்கச்சாவடிகளை படிபடிப்யாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  கோவை, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அளவிலான  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சேலத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தலைவர் விக்கிரமராஜா  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,அனைத்து சுங்கசாவடிகளும் வருவாய் ஈட்டும் தொழில் கூடமாக மாறியுள்ளதாகவும், தமிழகத்தில் படிப்படியாக சுங்கசாவடிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை - திருச்சி சாலையில் ரூபாய் 58 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்புராயன் கலந்துகொண்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன், போக்குவரத்து...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக அன்று முதல்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனைத்து ஒன்றியங்களில் உள்ள பேரூர் கழகங்கள் மற்றும் கிளைக் கழகங்கள் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட காட்டுஎடையார் கிராமத்தில் கிளைக் கழக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடும் வகையில்,...
கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர் இமான் வயது 38, இவரது தாயார் மற்றும் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்று  நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி சென்ற நிலையிலும் கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில்  சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை...
எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் சபீக் அஹமது மற்றும் புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட தலைவர் சையது அகமது ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமை உரை நிகழ்த்தினார். இப்பொதுக்குழுவில் 2018-2021 ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கை மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலியால் தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஜனநாயக முறைப்படி...
மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்திற்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனைத்தொடர்ந்து தைராய்டு பிரச்சனை,...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கோள்ளப்பட்டி மாந்தோப்பில் பணப்பிரச்சனை காரணமாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் (ஆடிட்டர்) கொலை செய்து புதைப்பு, சாமல்பட்டி போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோள்ளப்பட்டி கிராமத்தில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜனா ரஞ்சன் பிரதான்(48).பட்டய கணக்கர் கொலை செய்யப்பட்டு மாந்தோப்பில் புதைக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த 26 ஆம் தேதி சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் ஆடிட்டர் ஜனா ரஞ்சன் பிரதான், தொழில்...
குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த தாய் துளசி, ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ஒன்றும் அறியாத ஒன்றரை வயதே ஆன பிஞ்சு குழந்தையை விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசி இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மனதையும் கனமாக்கியுள்ளது. மோட்டூரைச் சேர்ந்த வடிவழகனுக்கும் அவரது மனைவி துளசிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாயாரிடம் விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த வடிவழகன் அங்கிருந்த...
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அவனி லெகாரா. அதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார் அவனி. ராஜஸ்தான்...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் வருகை புரிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போது தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு புகழாரம் சூட்ட  வேண்டாமெனவும், அவையில் உள்ளவர்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்...
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மக்களிடம் பேசுவது வழக்கம். இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- நம்முடைய கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றறின் விளையாட்டு மைதானங்கள் நிரம்ப வேண்டும். அனைவரும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே, விளையாட்டில்...
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குடிபோதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்லகணபதி என்கிற விஜய்(21). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் நேற்று இரவு குடிபோதையில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரச்சனையில் சின்னமுத்து என்பவர் தலையில் விஜய் அடித்ததாகவும், அதனால் அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கலிபுல்லா நகர்...
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் நடத்தி வரும் நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரை வைத்து திருச்சி மாவட்டத்தில் போலியாக சாக்கு மூட்டைகள் தயாரித்து அதில் தரமற்ற அரிசி மூட்டைகளை விற்பனை செய்வதாக புகார் அளித்தார். அதனடிப்படையில் திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை, பகுதிகளில் உள்ள கடைகளிலும் மற்றும் விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அரிசி குடோன்கள் உள்ளிட்ட 16 இடங்களில்...
மதுரையில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதுநத்தம் சாலையில் நாராயணபுரம் அருகில் கட்டுமான பணியின் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவிக்கையில்:- மதுரை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மூலமாக இயங்கக்கூடிய பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் மூலமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வக்கோட்டை அருகில் தொண்டைமான் ஊரணியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவருக்கு 17,000 ரூபாய் மதிப்பில் சுயதொழில் ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு பெட்டிக்கடைக்கு தேவையான கட்டுமானப் பொருட்களும் பெட்டிக்கடைக்கு...
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில், தோட்டதக்காரத் தெருவில் தங்கப்பாண்டியன் என்பவருடைய மகன், மகள் இருவரும் தசைநார் சிதைவு நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாய முன்னேற்றக் கழகத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் நிறுவனத் தலைவர் செல்ல இராசாமணி ஆலோசனைக்கு இணங்க, கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், தலைமை நிலைய...
ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே, விளந்தை அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சிவனடியார்கள் தொண்டு மன்ற நிர்வாகிகள் பலர் முன்னின்று நடத்திய இந்த, திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில், சிவனடியார்களுக்கு, அரியலூர் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் ஏ.வி.எம். சாமிநாதன், சால்வை அணிவித்து பாராட்டினார். பக்த பிரமுகர் சண்முகம் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தை சார்ந்த அதிமுக பிரமுகர்களான, உஞ்சினி ஊராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் பெ.கண்ணன், உஞ்சினி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சிவாஜி ராஜு, ச.வாசன்கீர்த்தி ஆகியோர் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்  முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், திமுக அரியலூர் மாவட்ட செயலாளருமான, எஸ்.எஸ்.சிவசங்கர் ...
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அனைத்து...
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்களின்றி இன்று தொடங்கவுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க பேராலய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருடாவருடம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி திருவிழாவில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....
புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக குமரமலை வைரவமூர்த்தி, செயலாளராக குன்றாண்டார்  கோயில் குமாரசாமி, பொருளாளராக திருக்கட்டளை ராஜா, அமைப்பு செயலாளர் நமணசமுத்திரம் வினோத், கொள்கை பரப்பு செயலாளராக திருப்புனவாசல் வேதாரண்யேஸ்வரர், கௌரவத் தலைவராக புதுக்கோட்டை ரவி சுவாமிநாத மற்றும் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தில் புதிதாக அமைந்துள்ள மாநில அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, மறைந்த முன்னாள் மாவட்டத்தின் சங்க சிவாச்சாரியார்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வது,...
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 1ம் தேதி புதன்கிழமை முதல் நடைபெறஉள்ளது. நேரடி பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 1:30 வரையும், இணையவழி வகுப்புகள் மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்கள் கொண்டு...
போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:- போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 மாதங்களில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும் பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலுக்கு மட்டும் வழங்க அறிவுறுத்தப்படுகிறது....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன் மணி வளவன் கலைவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்கநத்தம் கிராமத்தில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், கடந்த...
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன்  அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிபடுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வால் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார் விரகனூர் வேலம்மாள் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கிர்த்திஷ் மதுரை கோசாகுளத்தில் நடந்த இந்த சாதனையை  சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளது . இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக  மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளான ஆளவந்தார், சரவணன் மற்றும் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இந்த...
கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் இருவரும் சுற்றி பார்த்துவிட்டு மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தப்பிலினள்ளி பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 6 பேர் கொண்ட கும்பல்,...
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் இறைச்சிக்காக ஆடு வதை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியன், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஆடுகளை நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டுமே வதை செய்ய வேண்டும். மீறி சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் ஆடு வதை செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் முக.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், '3 வேளாண் சட்டங்களும் அழிக்கக் கூடியது. சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல. எனவே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சேலம்,...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.61 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.97 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,61,56,428 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,97,618 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,31,41,497 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,12,810 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,759 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 509 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,37,370 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
வித்தே விளைச்சலுக்கு ஆதாரம் என்ற முதுமொழிக்கு ஏற்ப தரமான சான்று விதைகளை வழங்கியும் விதைத்தரத்தினை உறுதி செய்தும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை செயல்பட்டு வருகிறது. வேளாண் துறை முலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விதைச்சான்றுத் துறையால் சான்றளிப்பு செய்யப்பட்டு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை பெருக்கு திட்டத்தை செயல்படுத்தி வரும் உதவி விதை அலுவலர்களுக்கான விதைச்சான்று நடைமுறை குறித்த் பயிற்சி நேற்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக...
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.  முகாம் லாரி மார்கெட்டில் நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்க தலைவர் ஆர்.எம் .துரைமணி தலைமையேற்று நடத்தினார்.  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு அனைவருக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள் .  போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி  சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை லாரி ஓட்டுர்களுக்கு எடுத்துரைத்தார்.  கண்தான கழக தலைவர் கோவிந்தராஜன்   கண்தானம் பற்றிய விழிப்புணர்வை விளக்கினார்கள் . போக்குவரத்து உதவி...
இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.தற்போது கொரோனா குறைந்துள்ளது. பல மதங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் படு ஜோராக நடைபெறுகிறது. எனவே மக்கள் பாதிக்காமல் சமூக இடைவெளியுடன் இவ் விழாவை கொண்டாட எங்கள் மாநில நிர்வாக குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க 1.25 லட்சம் இடங்களிலும் கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் விநாயகர் சிவைக்க...
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியை கடந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தடுப்பூசி பணிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய...
நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வணிகரிடம் 10 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை தேனி ரோடு, அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை அச்சுறுத்தி பிடிங்கிக் கொண்டதாக கடந்த மாதம்...
 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுக்கும் மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறை சார்ந்த காலி பணியிடங்கள் இருந்தும் தமிழ்நாட்டில் பணி செய்ய பல மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு காமராஜர் நகர் பகுதியில் 1929 இல் மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலஆண்டுகளாக இருக்கும் இம்மயானத்தில் தற்போது மண்ணின் தன்மை கெட்டு விட்டதாகவும், அருகில் குளம் இருப்பதால் புதைப்பதற்கு குழிதோண்டினால் தண்ணீர் வந்துவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால்  இஸ்லாமியர்களின் இறந்தவர் உடலை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மயானத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மண் கொட்ட வேண்டும். மயானத்திற்குள் தண்ணீர் வராமல் இருக்க மயானத்தில் மண் கொட்டி உயரப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென...
வருகிற 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி  புதுக்கோட்டை, இலுப்பூர் கல்வி மாவட்டங்களைச்சேர்ந்த உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான  முன்னேற்பாடு  கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக தேர்வுக்கூட அரங்கில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசும்போது  கூறியதாவது: வருகிற 1ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய  வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள்   இயங்க  உள்ளன. பள்ளிகள் திறப்பதையொட்டி  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி நிர்வாகத்தின்வாயிலாக...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பொருந்தலாறு டேம் பகுதியில்,500  குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர், இங்கு வசித்து வருபவர்கள், மீன் பிடித்தல்,  மற்றும்,கூலி தொழில் செய்து வருகின்றனர், இந்நிலையில் பொருந்தலாறு நியாய விலைகடையில் ரேசன் பொருட்கள் வாங்க வருபவர்களை, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருதகாளியம்மன் கோவில் அருகே சென்று கைரேகை வைத்து விட்டு, அங்கிருந்து டோக்கன் வாங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நியாய விலை கடைக்கு வந்து  நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருடகளை பெற்று கொள்ளும் அவலநிலை தொடர்வதாகவும்,...
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்து வருவதால் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில், மசோதா இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி...
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், இவர்களின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆங்கிலத் துறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக ராமாபாயின் படைப்புகள்...
ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர்க ல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டி யைச் சேர்ந்தவர் தங்கராஜ் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி இந்த தம்பதியரின் மகள் சரஸ்வதி. இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி வரை படித்து விட்டு பி.பி.எட் படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். தனது இளம் வயதில் இருந்தே நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களில்...
சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன் இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.  இவருடன் கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 பேர் உடன்பிறந்தவர்கள் ஆவர்கள். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு...
பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படவுள்ளதாக, ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார். அதற்கு குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது நெஞ்சில் உள்ளது; இருப்பினும் நேற்று முதலமைச்சர் குறுக்கிட...
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 முதல் 12.30-க்குள் சத்துணவு தரவேண்டும். காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தக் கூடாது. மூக்கை சொறிதல், தலை கோதுதல், கண், காது, வாயை தேய்த்தல் மற்றும் எச்சில் துப்புவதை...
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்துள்ள ராமாநாதபுரம் கிராமத்தில், லட்சுமி - வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விறகு வெட்டியவர்கள், அங்கு 2 பீரங்கி குண்டுகள் இருப்பதை கண்டு பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்து சோதனையிட்டனர். பின்னர், வெண்குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 2 பீரங்கி குண்டுகளையும் அவர்கள் சோதனையிட்டனர். இவை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின்போது...
சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்த படகை பறிமுதல் செய்ய முயற்சித்த மீன்வளத்துறை மற்றும் காவல் படையினரும் சென்ற படகை புதுவை மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடித்தனர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என தடை உள்ளது. அதுமட்டுமில்லாமல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து கடலில் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோர காவல்படையும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தாழங்குடா நல்லவாடு கடல் பகுதியில் புதுவை...
அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு செல்லப்பட்டது. இப்பயிற்சிக்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை அலுவலர் ஜெயவேலன் தலைமை வகித்து இப்பயணத்தை துவக்கி வைத்தார். பிறகு வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசியர் செரின் ராஜம்மாள் கூறுகையில், மானாவாரி சாகுபடி பயிர்களான பயறுவகைப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள் பராமரிப்புகள் குறித்தும்,...
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் வருகின்ற  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டும்  வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் நீண்ட நாட்களாக வகுப்பறைகள் மூடிய நிலையில் இருந்ததால்,  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும்...
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாடு திரும்பி கொண்டிருந்தது. அப்போது,...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியான ரவி என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆக.27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், இதனால், இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீலகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார்...
சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000த்தில் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். ரூ.2,097...
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிற்கிணங்க  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படி, கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கறம்பக்குடி நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட இரண்டு இடைநின்ற பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர். பின்னர் அம்மாணவிகள் பிலாவிடுதி ஊராட்சி ஒன்றிய...
வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படிரூபவ், நடப்பு ஆண்டில் காரீப் பருவத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா” என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மக்காச்சோளப் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார் பாளையம், தா.பழூர், சுத்தமல்லி...
வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் நெல் சீசனில் நெல் கொள்முதலை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியை பல ஆண்டுகளாகச் செய்துவந்த தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத திமுக ஆட்சியில் செயலிழந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது. தற்போதைய நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகத் திறமை இன்மையால், மத்திய அரசு, தமிழகத்திற்குத் தர வேண்டிய 2,000 கோடி...
பழைய ஓய்வூதியத்தினை நடைமுறை படுத்திட வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழக நிதியமைச்சர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய செய்தி மிகுந்த மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அகவிலைப்படி உயர்த்துவதும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதும்...
தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று இன்று காலை வெளியான நிலையில் அவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று...
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதுவரை நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா குறைந்த மாவட்டங்களிலும் பொது மக்கள் முக கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமும், தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடமும் நோய்...
கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதனால், குழந்தைகள் கொரோனா 3வது அலையில் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் கொரோனா 3வது அலை வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என...
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதன்படி, பள்ளிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா சிகிச்சை மைய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்....
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,467 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 354 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, இபிஎஸ், சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த கொடநாடு வீட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. நள்ளிரவில் பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஆவணங்களை கொள்ளையடித்து விட்டதாக பதிவான வழக்கின்பேரில் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று...
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிற நாட்டினர் அங்கு வசிக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல்...
வார விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் இன்று காலை முதல் தடை நீக்கபட்டதால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுவாமி...
சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்தியநாராயணன்(26), சூரியநாராயணன்(24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. ஆனால் அண்ணன் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சத்யநாராயணன் திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கிக் கொண்டு வடபழனியில் உள்ள சங்கர மடத்தின் சமையலராக வேலை செய்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று விடியற்காலை சத்யநாராயணன் நெமிலிச்சேரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவல்சேரி என்கிற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பிறகு மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோலை பிடித்து...
நாமக்கல் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் மூலம் நாமக்கல்லில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை தற்போதைய அரசு தர கட்டுப்பாடு செய்ய வேண்டும் என நாமக்கல் நகர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் கொரோனா ஊரடங்கிலும் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுமா என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் 37 ஏக்கர் பரப்பளவில்,...
டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் இந்தியா சார்பில் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி...
மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்று கொண்டார். மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து கடந்த 14ம் தேதி மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய ஆதீனம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த புதிய ஆதீனம் பதவியேற்பு நிகழ்ச்சியில்,...
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நாமக்கல் எம்.எல்.ஏ பங்கேற்றார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் சாலையில் (கழிவுநீர்) சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.இராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரை என்கிற ராமசாமி, செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சத்யபமா வேல்முருகன் மற்றும் செல்லப்பம்பட்டி...
24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டமானது இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக இன்று முதல் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அத்துடன் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. மேலும் திரையரங்க ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டிய நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44.44 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21,25,83,644 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,44,390 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,01,97,556 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,11,524 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,072 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில்...
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து நாடு திரும்பிய விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை முன்னிட்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்டு 14ந்தேதி முதல் இதுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க அரசு மீட்டுள்ளது. இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி...
உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89,ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கல்யாண் சிங், கடந்த ஜூலை 4-ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதல்வாக கல்யாண் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேச ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். கல்யாண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளையிலிருந்து காலை 5.30 மணி முதல் இரவு 11 மணிவரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை ( 23/08/21) முதல் வார நாட்களில் ( திங்கள் முதல் சனி வரை) காலை 5.30 முதல் இரவு 11 மணிவரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. நெரிசல் மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணிவரை மற்றும்...
பிரபல யூடியுபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது. பப்ஜி மதன் மீது, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில்  வழக்குப் பதிவுசெய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு...
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வீடுதேடி வரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவரான நல்லெண்ணெய் சித்ரா இன்று நள்ளிரவு 2 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த 80களில் பிரபல நடிகையான சித்ரா(56) இயக்குனர் கே.பாலச்சந்திரனின் அவள் அப்படிதான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவராவார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் இவர் நல்லெண்ணெய் சித்ரா என்று...
உளுந்தூர்பேட்டையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் கடத்தல் நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன் தலைமையில், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், அருட்செல்வன் மற்றும் காவலர்கள் ஆகியோர்...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய் தொற்றும் தன்மை அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் செயலாக்கம் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த...
கேரளாவில் கொரோனா அச்சம் காரணமாக, வழக்கமான உற்சாகமின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகைகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள புராணப்படி மக்களைச் சந்திக்க வரும் மாவலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது. வழக்கமாக வண்ணமயமான அத்தப்பூ கோலம், கைகொட்டிக் களி எனப்படும் பாரம்பரிய நடனம், உற்சாகமான ஊஞ்சல் விளையாட்டுகள் என ஓணம் பண்டிகை களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில், ஓணம் கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். கோயில்களில்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு அறையப்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் சேகர்(47). இவர் ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மனைவி சரோஜாவிடம் காய்கறி வாங்கி வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்த நிலையில், அரையப்பட்டி அருகிலுள்ள குவாரி குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...
போக்குவரத்து துறையில் வாரிசுதாரர்களுக்கு காலியாக உள்ள கருணை அடிப்படையிலான பணியிடம் அனைத்தும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதியளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பரமக்குடியில் இருந்து கோயமுத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், பொட்டகவயல், ஆனந்தூர், தொண்டி, சாயல்குடி, ஆக்கன் வயல் உள்ளிட்ட 12 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை பச்சைக்கொடி அசைத்து அமைச்சர்...
நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆக்ஸ்ட் 10 வரை நடைபெற்றது. அதன்பிறகு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு...
சிவகாசி அருகே தொழிலதிபர் கொலை வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் என்பவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து சென்றவர், திருத்தங்கல் அருகேயுள்ள ஈஞ்சார் கண்மாய் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய சிவகாசி நகர் காவல்துறையினர், கொலைவழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். சந்தனகுமாருடன் கடைசியாக ஃபோனில் பேசிய சிவகாசி, நேரு காலனியைச் சேர்ந்த சோனைக்குமார் என்பவரை பிடித்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகள் தூர்வாரப்படுவதையும், மேலும், பொதுப்பணித்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்கால்களும் தூர்வாரப்படுவதையும் மாவட்ட கலெக்டர்  ஸ்ரீதர் ஆய்வு செய்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல், முறையாக வெளியேற்றம் செய்யப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கிழக்குப் பகுதியில் உள்ள மாரியன்கோவில்...
மோடி அரசு யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கார்ப்பரேட்டுகளுக்காகவா? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 லட்சம் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே...
திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு என்ற முருகேசன்(52). விவசாயியான இவர் பழனி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வளர்மதி(45). இவர்களுக்கு சிவரஞ்சனி(21) என்ற மகளும், கார்த்திகேயன்(18) என்ற மகனும் உள்ளனர். இருவரும் கல்லூரு படிப்பை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு...
 திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி துண்டுப் பிரசுரத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களையும் வியாபாரிகள் மற்றும் பேருந்துக்காக...