புதுக்கோட்டை குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் ஓவியப்போட்டி

புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் ஓவியப்போட்டி நடைபெற்றது.

பள்ளியின்  தலைமை ஆசிரியை எஸ்.அன்னபூரணி தலைமை வகித்தார். சிறுவர்கள், மாணவ, மாணவிகள் காமராஜரின் வாழ்க்கை பற்றி விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர். சிறப்பாக ஓவியங்களை வரைந்த மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்து தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார். நிகழ்வில் ஆசிரியைகள் கிரிஜாம்பாள், அஞ்சலிதேவி, காளியம்மாள், கலையரசி, கீதா மற்றும்  மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர். முன்னதாக ஆசிரியை பார்கவி வரவேற்றார். நிறைவாக பள்ளியின் ஆசிரியை மேனகா  நன்றி கூறினார்.