கொத்தமங்கலத்தில் போலீஸாரைக் கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து குடும்பத்தினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ராசு(65). இவருக்கு சொந்தமான மரத்தை அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வெட்டிவிட்டாராம்.இது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் கொத்தமங்கலம் கடை வீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலலீஸார் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்துசென்றனர். இதனால், ஆலங்குடி-கீரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி் நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.