அறந்தை மக்கள் நல பைத்துல்மால் சார்பில் 250 குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் அமீது தெருவில் செயல்படும் அறந்தை மக்கள் நல பைத்துல்மால் அமைப்பினர் 1.25 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ அரிசி பைகளை 250 ஏழை குடும்ங்களுக்கு வழங்கினர்.

பைத்துல்மால் தலைவர் நோக்கியா சாகுல் அமீது தலைமையில் செயலாளர் முகம்மது ஆரிப், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர்  முன்னிலையில் கிரசன்ட் பள்ளி தாளாளர் முகம்மது அசாரூதீன், சேக்பாத்திமா பள்ளி தாளாளர் சேக் அலாவுதீன், எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி ஆகியோர் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி கொண்ட பைகளை கொடுத்து துவக்கிவைத்தனர். பைத்துல்மால் நிர்வாகிகள் முகம்மது அனஸ், காலித் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.