தமிழக மீனவர் 4 பேர் ஆசிட் ஊற்றி கொலை கொலை செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறேன் கோட்டைப்பட்டினம் மீனவர்களை சந்தித்தபின் தமிமுன்அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியும் ஆசிட் வீசியும், 4 இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில் இலங்கை கடற்படை மீது குற்றம் சாட்டினார்.