10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.  மாணவர்கள் 37 மாணவிகள் 37 மொத்தம்  தேர்வு எழுதிய 74 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

யாழினி, சுஜிதா, துர்கா, மணிவாசன் ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் யாழினி, சுஜிதா, தீபஸ்ரீ, மணிவாசன், மேகஸ்வனா, ஆதிஷ், கவின் கிஷோர், லோகேஸ்வரன், முகமது அர்சத் ஆகியோர் 100%100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் யாழினி, சுஜிதா, தீபஸ்ரீ, ஆலியா ஜாஸ்மின் ஆகியோர் 100%100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் துர்கா, மகாநிவேதிதா, சந்தோஷினி ஆகியோர் 100%100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் யாழினி 100%100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

23 மாணவர்கள் 475 மதிப்பெண்ணுக்கு மேலும் . 35 மாணவர்கள் 450 மதிப்பெண்ணுக்கு மேலும் . 56 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளி ஆலோசகர் நாகாஅதியன், பள்ளியின் இயக்குநர் சுதர்சன் பள்ளியின் சிஇஓ காவியாமூர்த்தி பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராம சுந்தரி, கெளரி, வரலெட்சுமி மற்றும் கோமதி ஆசிரியர்கள் ராஜாமணி, ஜெயசுதா, சித்திரைச்செல்வி, சரவணபவா, பிரபாகரன், பாலசங்கர், கமல்ராஜ் மற்றும் மேலாளர் ராஜா, உதயகுமார் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.